வெள்ளி, 21 நவம்பர், 2014

நாடி வகைகள், பார்க்கும் விதம்





E-mail
Print
நோய் கணிப்பு முறைகள்:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.  அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை:
 மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
நாடி நிதானம்;
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.

எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடி பார்க்கும் மாதங்கள்:
சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு
உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.

நாடிகளின் தன்மை:

வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.
அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.
பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.
சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும்,  உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.
உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில்                     15000
கண்களில்                     4000
செவியில்                      3300
மூக்கில்                          3380
பிடரியில்                       6000
கண்டத்தில்                   5000
கைகளில்                       3000
முண்டத்தில்                 2170
இடையின் கீழ்              8000
விரல்களில்                   3000
லிங்கத்தில்                    7000
மூலத்தில்                       5000
சந்துகளில்                     2000
பாதத்தில்                        5150
மொத்தம்                       72000

நாடி துடிப்பது நலம் நாடி..... நாடி... அதை நாடு... இல்லா விட்டால் ஏது இந்த மனித கூடு? இந்த மனிதக் கூட்டுக்கு ஆதாரமானவை அண்டவெளியில் அமைதுள்ள ஐம்பூதங்களே. அண்டவெளியில் உள்ள ஐம்பூதங்களே உடலாகிய உயிர் குடிகொண்ட பிண்ட வெளியிலும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்தே வாதம், பித்தம், கபமாகிய நாடிகள் தோன்றுகின்றன என்பதையும் இந்த நாடிகள் பற்றியும் சென்ற பதிவில் ஒரு பருந்துப் பார்வைக் பார்த்தோம். ஆமாம் அந்த நாடி எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு செல்கிறது? அதன் நிறம் என்ன? குணம் என்ன? நடை என்ன? 
தொப்புளுக்கு கீழே 4 அங்குல அகலமும், 2 அங்குல நீளமும் உடைய பவளம் போன்ற செந்நிறத்தில், முளை போன்ற தோற்றமுடைய ஒரு இடமே நாடிகளுக்கு மூலஸ்தானம். அதிலிருந்து கிளம்பும் நாடிகளே இலையில் காணலாகும் நரம்புகள் போல பல கிளைகளாகப் பிரிந்து மிகவும் மென்மையாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. இவை உடலில் உள்ள ஏழு வகை தாதுக்களில் இடைப்புகுந்து செல்லும் போது அவற்றின் நிறங்களையும் அடைகின்றன. இவற்றுள் சில பருமனாகவும், சில மெல்லியதாகவும், சில முடிச்சுள்ளவையாகவும், சில அடிப்பக்கம் பருத்தும் மேலே வர வர மெலிந்தும், இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்தும் பல திசைகளில் பிரிந்து நுன்மையான நுணிகளை உடையனவாகவும் எல்லாம் ஓட்டை உடையனவாகவும் இருக்கும். நாடி என்பது இரத்தக்குழாய்களில் உண்டாகும் துடிப்புகளின் எண்ணிக்கையோ, தாள அமைதியோ, அழுத்தமோ மட்டுமல்ல. அது ஒவ்வொரு உடம்பிலும் செயல்படும் உயிரின் முழு இயக்கம். இவை உடம்பின் ஒவ்வோரு அணுவிலும் செயல்படுகிறது. இதனாலேயே,
”நாடியென்றால் நாடியல்ல; நரம்பில் தானே,
நலமாகத் துடிக்கின்ற துடி தானுமல்ல, 
நாடி என்றால் வாத பித்த சிலேற்பணமுமல்ல, 
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல,
நாடி என்றால் அண்டரண்டமெல்லாம்நாடி 
எழுவகைத் தோற்றத்து உள்ளாய்
நின்றநாடிய துயராய்ந்து பார்த்தாரானால் 
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே” 
என்று சதக நாடி நூல் உரைக்கும். இதயம் விரியவும் சுருங்கவும் செய்யும் போது நாடி நரம்புகளும் விரியவும் சுருங்கவும் செய்யும் நாடித்துடிப்புச் சிறப்பாக இரத்தக் குழாய்களில் பத்து இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் நாடியைப் பார்க்கும் இடங்கள் பத்தாக உள்ளன. அவையாவன கை, கண்டம், காலின் பெருவிரல், கணுக்கால், கண்ணிச்சுழி, ஆகியன. இவற்றில் கையைப் பார்ப்பதே துல்லியமான கணிப்புக்கு உதவும் இடமாகும். ஆணுக்கு வலக்கையிலும் பெண்ணுக்கு இடக்கையிலும் நாடித்துடிப்புச் சரியாக காணக்கூடும். நாடி பார்க்குமுன் நோயாளியின் கைவிரல்களை நெட்டை எடுத்துவிட்டு, ஒருமுறை உள்ளங்கையில் சூடு பறக்கத் தேய்த்த பின் மூன்று விரல்களால் அழுத்தியும், விட்டும் மாறி மாறிச் செய்யும் போது நாடித்துடிப்பின் வேறுபாடுகளை விரல்களால் நன்கு உணர முடியுமாம்.
துவாக நடையைத்தான் அன்ன நடை, மான் போன்ற துள்ளல் நடை, சிங்க நடை என்றெல்லாம் வர்ணனை செய்து பார்த்திருக்கிறோம். இரத்தக்குழாயில் ஓடும் குருதியின் நடையை வருணிக்கும் நம் சித்த வைத்தியர்களின் கற்பனைனையை எப்படி பாராட்டுவது. அதிலும் சிங்கம் போன்ற ஆண்களுக்கும் அன்னம் போன்ற பெண்களுக்கும் நடை வேறுபாடு உள்ளது போல ஆண்களுக்கும் பெண்களுக்கு நாடி நடையிலும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ள திறம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. ஆண்களுக்கு வாத நாடி, கோழி போலவும், குயில் போலவும், அன்னம் போலவும் நடக்கும். பித்த நாடி, ஆமையைப் போலவும் அட்டையைப் அசைந்து அசைந்து நடக்குமாம். சிலேத்தும நாடி பாம்பு போல ஊர்ந்தும் தவளை போல குதித்தும் செல்லுமாம். பெண்களுக்கு வாதநாடி பாம்பு போலவும், பித்த நாடி தவளை போலவும், சிலேத்தும நாடி அன்னம் போலவும் நடக்குமாம்.
நாடியைப் பார்க்கும் நேரம் மாதங்களுக்கு ஏற்ப மாறுபடும். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாலையும் (உதயத்தில்), ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மதியமும், மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையும், பங்குனி, புரட்டாசி, ஆவனி மாதங்களில் இரவும் நாடியைப் பாக்க வேண்டிய காலங்களாகும். நாடியைப் பார்க்க நாள் நட்சத்திரம் வேறு பார்க்க வேண்டுமா என்று நினைக்கக் கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்த நேரத்தில் பார்த்தால் நோய் அறிகுறியை மிகத்துல்லியமாக அறியலாம் என்று ஆய்ந்து சொன்ன அவர்களின் அறிவுக்கூர்மையைப் பார்க்க வேண்டுமல்லவா? பாடலைப் பார்க்கலாமா?
”சித்திரை வைகாசிக்குஞ் செழுங்கதிருப் பிற்பார்க்கஅத்தமாம் ஆனியாடி ஐப்பசி கார்த்திகைக்கும்மத்தியானத்திற் பார்க்க மார்கழி தைமாசிக்கும்வித்தகக் கதிரோன் மேற்கே வீழ்கும் வேளையிற் றான்பாரேதானது பங்குனிக்குந் தனது நல் ஆவனிக்கும்வானமாம் புரட்டாசிக்கும் அர்த்த ராத்திரியில் பார்க்கதேனென மூன்று நாடி தெளியவே காணும்”
இவை மட்டுமல்ல எப்போதெல்லாம் நாடிச் சோதனைச் செய்யத் தகுதியற்ற நேரம் என்றும் கூறியுள்ள அவர்களின் திறனை எத்துனைப் பாராட்டினாலும் தகாது. எண்ணெய்க் குளியல் செய்த பின்பு, உடல் ஈரமாக (நனைந்து) உள்ள போது, உணவு உண்ட உடனே, மது அருந்தியுள்ள போது, புகையிலை போன்றவை பயன்படுத்தியுள்ள போது, வேகமாக நடந்த பின்பு, வாதி, பேதி, விக்கல் போன்றவை உள்ள நேரத்தில், உடல் உறவு கொண்ட உடனே எல்லாம் நாடிச்சோதனை செய்தால் நாடியைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவத்தில் பொதுவாக வெள்ளை ஆடை அழகிகள் வந்து கண்களால் தன் கையில் கட்டிய கடிகாரத்தையும், கையால் நோயாளியின் கையையும் பிடித்து நாடியை எண்ணி எழுதிவிடுவர். அவ்வளவுதான்.
இங்கே சித்தர்கள் பாருங்கள். வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ள பாங்கை. ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போக.
இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

செவ்வாய், 18 நவம்பர், 2014

பெயரியல் ஜோதிடம்



மறைமுக ஞானங்களைத்தெரிந்துகொள்வதில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்தது.இளம் வயதில் நான் முதன்முதலில் கற்க முயன்ற  மறைமுக ஞானங்கள் எண் ஜோதிடமும்,பெயர் ஜோதிடமுமாகும்.நான் இளைஞனாக இருந்த காலத்தில்தான் எண் ஜோதிடமும்,பெயர் ஜோதிடமும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்திருந்தது.அக்காலத்தில் தமிழிலோ,பிற இந்திய மொழிகளிலோ எண் ஜோதிடம் பற்றியோ,பெயர் ஜோதிடம் பற்றியோ எழுதப்பட்ட நூல்கள் கிடைப்பது அரிதாக இருந்ததுமேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல்கள்தான் அக்காலத்தில் அதிகமாக கடைகளில் விற்பனையாகிக்கொண்டிருந்தனஅப்பொழுது எனக்கு ஆங்கில அறிவு குறைவுதான் என்றாலும் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும்அந்த கால சூழ்நிலையில்  நான் மேற்கத்திய தேசத்தவரான கீரோ அவர்கள் எழுதிய எண் ஜோதிட நூல்களைப்படித்திருக்கிறேன்.

மேற்கத்தியவரான கீரோ அவர்கள் எழுதிய நூல்களைத்தான் இந்தியாவை சேர்ந்த எண் ஜோதிடர்கள் அக்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள்,தற்காலத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்இந்தியாவிலுள்ள காசி நகர பண்டிதர்களிடம் தான் கற்றுக்கொண்டதைத்தான்,தன்னுடைய நூல்களில் எழுதியிருப்பதாக கீரோ குறிப்பிடுகிறார்காசிப்பண்டிதர்களிடம் கற்றுக்கொண்டதாக அவர் குறுப்பிடுவதால் ,நம் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் அது சம்பந்தமான நூல்கள் இருக்கலாமென எனக்குத்தோன்றுகிறதுஆனால் அத்தகைய நூலை எங்கே தேடுவது என்று எனக்குத்தெரியவில்லை.

எண் ஜோதிடம்,பெயர் ஜோதிடம் இவைகளைக்கற்றுக்கொள்ள தெளிவான நூல்களோ,வழிகாட்டுதல்களோ கிடைக்காத காரணத்தால்,அவைகளைக்கற்கும் ஆர்வம் எனக்கு குறைந்துபோய்விட்டிருந்ததுஇதனால் நான் இந்திய முறை ஜோதிடக்கலையை கற்கத்தொடங்கிவிட்டேன்ஜோதிடக்கலையில் போதிய அளவிற்கு ஞானம் பெற்ற மன நிறைவு எனக்கு உண்டுஆனால் எண் ஜோதிடம்,பெயர் ஜோதிடம் போன்ற விசயங்களை ஆராய வேண்டுமென்ற எண்ணம் மட்டும் எனக்குள் நெடுங்காலமாக இருந்துகொண்டேயிருந்ததுஇதனால் அதைப்பற்றிய தேடுதல்களும் எனக்குள் இருந்து வந்தன.

தற்காலத்தில் பெயர் ஜோதிடம் ஒரு வகையான தந்திர சாஸ்திரம் போல் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிய முடிகிறதுஇதை வைத்துக்கொண்டு சிலர் லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் சம்பாதித்தும்விட்டார்கள்இதை ஏன் வெளிப்படையாக வைக்க யாரும் முன்வரவில்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்பெயர் ஜோதிடம் வெளிப்படுவதற்கு வித்திட்டவர்கள் பண்டிட் சேதுராமன் அவர்கள்அவர் எழுதிய நூல்கள் தமிழகம் மட்டுமின்றி வெளினாடுகளிலும் பிரபலமடைந்ததுபெயர் எண்களுக்கும் மந்திர சாஸ்திரத்திற்கும் தொடர்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்பெயர் ஜோதிடத்தை பயன்படுத்தும் முறைகளை வெளிப்படுத்தினாரே தவிர,அதற்குப்பின்னால் மறைந்திருக்கும் ரகசியங்களை அவர் வெளிப்படுத்தவில்லைஅவரைத்தொடர்ந்து பண்டிட் லக்ஷ்மிதாஸ் என்பவரும் தமிழில் பெயர் ஜோதிடம் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்இவர்களைத்தொடர்ந்து பலர் தமிழில் பெயர் ஜோதிடம் பற்றிய புத்தகம் எழுதியாகிவிட்டதுஆனால் பெரிய அளவில் ரகசியங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஜோதிடத்தில் கிரக காரகத்துவங்களைக்கொண்டு பலன் கூறும் முறை பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது.ஒன்பது கிரகங்களுக்கும் உரிய காரகத்தன்மைகள் பல உள்ளனகாலத்திற்கேற்ப புதிய காரகத்தன்மைகள் அவ்வப்பொழுது கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனஅந்த அடிப்படையில் எண்களையும்,எழுத்துக்களையும் கிரக காரகத்துவத்துடன் இணைத்திருக்கலாம் எனத்தோன்றுகிறதுராசிகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் இவைகளுக்கு எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை ஜோதிட நூல்களில் காணமுடிகிறதுஆனால் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விவரம் எந்த நூல்களிலும் கொடுக்கப்படவில்லை.

மேற்கத்தியவரான கீரோ காசிப்பண்டிதர்களிடம் தான் கற்றுக்கொண்ட எண்ணியல் மற்றும் பெயரியல் சார்ந்த விசயங்களை,தான் பயன்படுத்தும் ஆங்கில மொழியமைப்பிற்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டு,அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திப்பார்த்து,தான் பெற்ற அனுபவங்களை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார்கீரோ அவர்கள் இந்தியர்களிடம் கற்றுக்கொண்ட எண்ணியல் மற்றும் பெயரியல் கலை இந்தியாவில் வளர்ச்சி பெறவே இல்லை,அதன் மூல நூல்கள் முற்றிலுமாக அழிந்துபோயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறதுகீரோ அவர்கள் எழுதிய நூல்கள்தான் இந்த கலைகளுக்கு மூல நூல்களாக தற்காலத்தில் இருந்து வருகின்றன.தற்காலத்தில் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் எண்ணியல் மற்றும் பெயரியல் கலை கீரோவின் நூல்களை அடியொட்டியே அமைந்துள்ளது.

கீரோ அவர்கள் தான் இந்தியர்களிடம் கற்றுக்கொண்டதாக கூறிக்கொண்டாலும்,அவர் தன் சொந்த கருத்துக்களையும் இணைத்தே நூல்களில் எழுதியிருக்கிறார்குறிப்பாக இந்தியர்கள் யுரேனஸ்,நெப்டியுன் போன்ற கிரகங்களை ஜோதிடத்தில் பயன்படுத்தவில்லை.ஆனால் கீரோ அவர்கள் 4ஆம் எண்ணிற்கு யுரேனஸையும்,7ஆம் எண்ணிற்கு நெப்டியூனையும் ஒதுக்கியுள்ளார்இந்தியர்கள் 4ஆம் எண்ணிற்கு ராகுவையும்,7ஆம் எண்ணிற்கு கேதுவையும் ஒதுக்கியுள்ளனர்ராகு,கேதுக்களைப்பற்றி அதிக விவரம் தெரியாததால் ஒருவேளை கீரோ அவர்கள் அவைகளை  யுரேனஸ்,நெப்டியுன் என எடுத்துக்கொண்டிருக்கலாம்.

தமிழ் மொழி எழுத்துக்களுக்கோ அல்லது வட மொழி எழுத்துக்களுக்கோ உரிய எண் மதிப்பீடுகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதால் பெயர் ஜோதிடத்தைப்பொருத்தவரை நாம் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தவேண்டிய கட்டாய சூழ்      நிலையில் உள்ளோம்எழுத்துக்களுக்கு எவ்வாறு எண் மதிப்பீடு செய்யப்பட்டது என்ற விவரம் கீரோவைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது,அவரும் அந்த ரகசியத்தை வெளியிடவில்லைவட மொழியில் உள்ள மந்திர சாஸ்திர நூல்களில் அதற்குரிய வழிமுறைகள் இருக்கலாம் எனத்தோன்றுகிறதுவட மொழி அறிந்தவர்களால் மட்டுமே அதை ஆராய்ந்து அறிய முடியும்.

எண்ணும் எழுத்தும்

எண் ஜோதிடத்தில்  எழுத்துக்களுக்கு பல்வேறு எண் மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.அவற்றில் சால்டியன் முறையில் கொடுக்கப்பட்டுள்ள எண் மதிப்பீடுகளே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறதுநாமும் இந்நூலில் சால்டியன் முறை எண் மதிப்பீடுகளையே பயன்படுத்தியிருக்கிறோம்அதுதான் நடைமுறைக்கு சரியாக வருகிறது.சால்டியன் முறை எண் மதிப்பீடுகள் கீழே தரப்பட்டுள்ளன 

எழுத்து

A,I,J,Q,Y
B,K,R
C,G,L,S
D,M,T
எண்

1
2
3
4
  
எழுத்து

E,H,N,X
U,V,W
O,Z
F,P
எண்

5
6
7
8

பெயர் கூட்டு எண் கணக்கிடும் முறை

பெயர் ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு பெயரின் கூட்டு எண்ணைக்கண்டறிய வேண்டுமானால்,எந்த மொழிப்பெயராக இருந்தாலும் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுதான் அப்பெயரின் கூட்டு எண்ணை கணக்கிட வேண்டும்.
உதாரணமாக சிவதாசன்ரவி என்னும் பெயருக்கு கூட்டு எண்ணைக்கணக்கிடுவோம்.
SIVADASANRAVI
3161 4 1315 21 61

எழுத்து
எண்
S
3
I
1
V
6
A
1
D
4
A
1
S
3
A
1
N
5
R
2
A
1
V
6
I
1
கூட்டு எண்
35

















  
சிவதாசன்ரவி என்ற பெயரின் கூட்டு எண் 35 ஆக வருகிறதுஇதை ஓரிலக்க எண்ணாக மாற்றினால் (3+5=8) 8 வரும்எண் 8சனிக்குரியதாகும்இவ்வாறு கூட்டிவரும் ஓரிலக்க எண்ணிக்கிற்குத்தான் பெரும்பாலான நூல்களில் பலன் கொடுக்கப்பட்டுள்ளதுஆனால் நாம் காணப்போகும் பெயர் ஜோதிட முறையில் பெயர் கூட்டு எண்ணை ஓரிலக்க எண்ணாக மாற்றக்கூடாதுஅதை அப்படியே வைத்துக்கொண்டு பலன் கூறவேண்டும்இங்கே உதாரணமாக எடுத்துக்கொண்ட சிவதாசன்ரவி (SIVADASANRAVI)  என்னும் பெயரின் கூட்டு எண் 35, அதில் எண் 3 குருவிற்குரியதாகும்,எண் 5 புதனுக்குரியதாகும்எனவே எண் 35 ஆனது குரு,புதன் சேர்க்கையைக்குறிக்கும்.குரு,புதன் சேர்க்கை சிறந்த கல்வியைக்கொடுக்கும்பேச்சாற்றல்,எழுத்தாற்றல் இவைகளைக்கொடுக்கும்இந்த பெயரை வைத்துக்கொண்ட பிறகுதான்,நான் எழுத்தாளராகவும்,பேச்சாளராகவும் மாறினேன்.

ஸௌந்தர்ய லஹரியில் பெயர் ஜோதிட ரகசியம்

பெயரின் கூட்டு எண்ணை ஓரிலக்க எண்ணாக மாற்றிக்கொண்டுதான் பலர் பலன் கூறிவந்தனர்.ஆனால் பண்டிட் சேதுராமன் அவர்கள் பெயரின் கூட்டு எண்ணை அப்படியே வைத்துக்கொண்டு பலன் கூறியிருக்கிறார்.அதாவது பெயரின் கூட்டு எண்கள் 10 முதல் 108வரையுள்ள எண்களுக்கு தனித்தனியாகப்பலன் கூறியிருக்கிறார்.இதற்கு மந்திர சாஸ்திரத்தில் வழியிருப்பதாக குறிப்பிடுகிறார்இவர் மந்திர சாஸ்திரமென மறைமுகமாகக்குறிப்பிடுவது ஆதிசங்கரர் அருளிய "ஸௌந்தர்ய லஹரிஎன்னும் நூலைத்தான்.இந்த ஸௌந்தர்ய லஹரியில்தான் பெயர் ஜோதிடத்தின் மர்ம முடிச்சு இருக்கிறது.இதை எதேச்சையாக ஆய்வு செய்தபோது,அதில் மறைந்துள்ள ரகசியங்கள் புரிந்ததுஸௌந்தர்ய லஹரியை ஒரு பரிகார நூலாக காலம் காலமாகப்பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்கிரக தோஷ பரிகாரம்,கிரக சேர்க்கைப்பரிகாரம்இதில் தான் கூறப்பட்டுள்ளது என்பதை அண்மையில்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கியஒரு தொகுப்புஅதில் ஈசன் அம்பிகையின் புகழை பாடுவதாகஸ்லோகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிசங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார், அப்போது ஈஸ்வரன் அவரிடம்  ஒரு சுவடி கட்டை கொடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன.  ஸ்தோத்ர சுவடியை பெற்று கொண்ட ஆதிசங்கரரை நந்திகேஸ்வரர் வழிமறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார்.  ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படுத்திக்கொண்டார்.இழந்த ஐம்பத்தொன்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாற்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து 100 ஸ்லோகங்களாக பூர்த்திசெய்ய வேண்டும் என்பது அம்பாளின் விருப்பமாக இருந்ததால், ஆதிசங்கரர் அம்பிகையை கேசம் முதலாக பாதம் வரை வர்ணித்து பாடி 100ஸ்லோகங்களையும் பூர்த்தி செய்தார்.

ஸௌந்தர்ய லஹரியில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் பரிகார பலன்களை கூறியிருக்கிறார்கள்.அந்த பரிகார பலன்களை படித்துப்பார்த்தால்,அவை பிருகு-நந்தி நாடியில் கூறப்படும் கிரக சேர்க்கைப்பலன்களை ஒத்திருக்கின்றனஎனவே ஜாதகத்தில் கிரக சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களுக்குஸௌந்தர்ய லஹரியில் உள்ள ஸ்லோகங்களை பரிகாரத்திற்க்காக பாராயணம் செய்யலாம்.இந்த ஸ்லோகங்கள் எல்லாம் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் சிலருக்கு அவைகளை உச்சரிப்பது கடினமாக இருக்கலாம்அத்தகைய சிரமம் உடையவர்கள் தங்கள் பெயரை குறிப்பிட்ட ஸ்லோக எண்ணுக்கு மாற்றி வைத்துக்கொண்டால்,அவர் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களிலிருந்து விடுபடலாம்உதரணமாக ஒருவருக்கு,அவருடைய ஜாதகத்தில் சனி,கேது சேர்க்கை இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அந்த ஜாதகருக்கு சரியான தொழிலோ,உத்யோகமோ அமையாது,அப்படியே அமைந்தாலும் அது நீண்ட காலம் நிலைத்திருக்காது.இதற்கு பரிகாரமாக,ஸௌந்தர்ய லஹரியில் உள்ள 78 ஆவது ஸ்லோகத்தை  தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் அவர் அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.அல்லது அவர் தன் பெயரின் கூட்டு எண் 78 வருமாறு அமைத்துக்கொண்டால் சனி,கேது சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

ஒருவருடைய பெயர் கூட்டு எண் எந்த கிரக சேர்க்கையைக்குறிப்பிடுகிறதோஅந்த கிரக சேர்க்கைப்பலன்களை ஒருவர் தன் வாழ்நாளில் தொடர்ச்சியாக அனுபவித்து வருவதை  காண முடிகிறது.இந்த பலன்களுக்கும் ஒருவர் பிறந்த தேதிக்கும் சம்பந்தமில்லை என்பதையும் அறிய முடிகிறது.ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட யோகம் இல்லையென்றாலும் தகுந்த பெயர் அமைப்பு மூலம் அந்த யோகத்தை அடைய முடியும் என்பதை ஆய்வில் அறிய முடிகிறது. 

திங்கள், 17 நவம்பர், 2014

மாந்தி கணிதம்



ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாறும், பகல், இரவு பொழுதுகளுக்கு தகுந்தவாறும் மாறுபடும். அதை கணிப்பது எப்படி என பார்ப்போம்.
பகல் நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை பகல் நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும். உதய நாழிகை என்பது காலை சூரிய உதயத்திலிருந்து கணிக்கப்படுவதாகும்.
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 – 2 = 26. எனவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே திங்கள் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 =18.எனவே செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே புதன் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10.எனவே வியாழக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே சனிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
பகல் நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 26 நாழிகை
திங்கள்கிழமை - 22 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 18 நாழிகை
புதன் கிழமை - 14 நாழிகை
வியாழக்கிழமை - 10 நாழிகை
வெள்ளிக்கிழமை - 6 நாழிகை
சனிக்கிழமை - 2 நாழிகை
இரவு நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை இரவு நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும்.
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே திங்கள் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 - 2 = 26.எனவே புதன் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே வியாழக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 = 18.எனவே வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே சனிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
இரவு நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 10 நாழிகை
திங்கள்கிழமை - 6 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 2 நாழிகை
புதன் கிழமை - 26 நாழிகை
வியாழக்கிழமை - 22 நாழிகை
வெள்ளிக்கிழமை - 18 நாழிகை
சனிக்கிழமை - 14 நாழிகை
மாந்தி ஸ்புடம் கணிக்கும் முறை
மாந்திஸ்புடம் என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் பகல் நேரத்திற்கு ஒன்றாகவும், இரவு நேரத்திற்கு வேறாகவும் இருக்கும்.
1 நாள் = 60 நாழிகை = 360 பாகை
1 பகல் = 30 நாழிகை = 180 பாகை
1 இரவு = 30 நாழிகை = 180 பாகை
பகல் நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , பகல் நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே பகல் நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி அத்துடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.
பகல் நேர மாந்தி ஸ்புடம் = (பகல் நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்)
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (26 * 6) =156
=156 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
திங்கள்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (22* 6) = 132
=132 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (18*6)= 108 நாழிகை
=108 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
புதன் கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (14*6)= 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வியாழக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (10*6)= 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (6*6)=36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
சனிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12
=12 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

இரவு நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , இரவு நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே இரவு நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.
இரவு நேர மாந்தி ஸ்புடம் = (இரவு நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (10 * 6) = 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
திங்கள்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (6* 6) = 36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12 நாழிகை
= 12 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
புதன் கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (26*6) = 156
= 156 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வியாழக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (22*6) = 132
= 132 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (18*6) = 108
= 108 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
சனிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (14*6) = 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
மேற்கண்டவாறு கணித்து வரும் பாகைகள் 360 க்கு மேல் இருந்தால், கணித்து வந்த பாகைகளிலிருந்து 360 பாகைகளை கழிக்க வேண்டும்.