வெள்ளி, 30 ஜனவரி, 2015

தாந்த்ரீக பூஜா முறைகள்


 Athiyanga Bhaktha Sevasramam.
                                  Paramer kavu,    
        Kedamangalam,  Paravur,  Kerala.   683513







                                                         

                    ஓம்...அஸ்ய ஸ்ரீ தந்த்ர தேவதாய சுபமங்களாய
                                      சகல சாஸ்த்ர வசீகர்னாய
                                     ஸ்ரீஸ்ரீ பிருகிருதி தேவமயே...


                 அபிசார ப்ரயோக ரக்ஷ பூஜாவிதானம்.

ஜோதிட தர்மபடி அஞ்ஞான தோஷங்களால் மனிதனுக்கு ரோகம், மாரனம், காரிய தடை, பிரிவுகள்  மனகுழப்பம் ஏற்படும் போது அது அபிசார தோஷங்களால் ஏற்படுகிறது என்பது முன்னோர் வாக்கு. 
அபிசார தோஷம் என்பது  செய்வினை எனப்படும் பூத ப்ரேத பைசாச பிரயோகம் என்றும்  மருந்து வைத்தல் எனப்படும் ம்ருத ஔஷத ப்ரயோகம் என்றும், ஏவல் எனப்படும் கனிக ப்ரயோகம் என்றும் சொல்லப்படுகிறது.

 அபிசார பிரயோகம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை தடுக்கவும் நிவாரணம் பெறவும் தந்த்ரீக சாஸ்திரத்தின்  அதர்வண தேவதா ஸ்ரீ ஸ்ரீ கார்த்யாயணி லக்ன பீட பூஜை சிறந்த பலனை தரும். பிரம்ம யட்சிணி உபகர்மமான ஸ்ரீகார்த்யாயிணி லக்ன பீடபூஜை செய்ய  அபிசார ப்ரயோகத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் அவர்  வீட்டிலேயே  பூஜை முறைகளை பின்பற்ற வேண்டும். இதனால் எத்தகைய அபிசார பிர்யோக மாக இருந்தாலும் முழுமையாக நீங்கி விடும்.

இது ஒரு தாந்த்ரீக பூஜை என்பதால் அவரவரே செய்ய வேண்டுமே தவிர பரிசாரகரோ, வேதியரோ, ப்ரோகிதரோ, சாதகரோ செய்யகூடாது. பாதிக்கப்பட்டவரின் ஸ்பிண்ட உறவுமுறை உள்ளவராக் இருக்கவேண்டும். அதாவது தாய் வழியில் மூன்று தலைமுறைக்குள்ளும் தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்குள்ளும் இருப்பவர்கள் வழிபாடுகளை செய்யலாம்.

பூஜைகளை மூன்று கட்டமாக செய்ய வேண்டும்
1. பிரதிஷ்டா பூஜை
2. பிராண பூஜை
3. பரிசார பூஜை.
பிரதிஷ்டா பூஜை ஒரு நாள் செய்யக்கூடியது. பிராண பூஜை தொடர்ந்து 18 நாட்கள் செய்யக்கூடியது. பரிசார பூஜை பலன் தெரியும் வரை தொடர்ந்து வாரம் ஒருமுறை செய்யக்கூடியது.

தாந்த்ரீக பூஜைகள் அனைத்தும் தெய்வ சக்தியை யந்த்ர ,சக்ர,அட்சர ரூபத்தில் ஆவாகனம் செய்து வழிபடுவதாகும். பஞ்ச கல்ப சாஸ்திர முறைபடி கார்த்யாணி பிரம்ம களம் அமைக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் தாங்களாகவே களம் அமைத்து பூஜை செய்யலாம்.
அல்லது ஆசிரமங்களில் கிடைக்கும் தயாரிக்கப்பட்ட களம் வைத்து பூஜிக்கலாம்.  வீட்டில் களம் அமைக்கும் போது பூச்சிகள் ஏற்படுவது வெடிப்புகள் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் இருப்பதால் அடிக்கடி களத்தை  மாற்ற வேண்டும்.

களம் அமைக்கும் முறை.
மஞ்சள் சந்தனம் தசாங்கம் ஆகியவற்றை சம அளவு (50 கிராம் அளவு) எடுத்து தண்ணீர் விட்டு மாவு பதத்திற்கு குழைத்துக்கொள்ளவும். அதில் ஜவ்வாது கோஷ்டம் அதிவிடயம் ரச செந்தூரம் அயசெந்தூரம் பச்சை கற்பூரம் அச்சரகந்தம் தலா 10 கிராம் சேர்த்து மீண்டும் குழைக்கவும்.குழைத்த கலவையை வட்டவடிவமாக தட்டி தர்ப்பைகுச்சியால் கார்த்யாயணி யந்திரத்தை வரையவும்.யந்திரத்தின் 16 மூலைகளிலும் மஞ்சள் குங்குமம் வைக்கவும். யந்திரத்தின் ஒவ்வொரு முக்கோணத்திலும் பாற்குரண்டி வேரின் மத்திய பாகத்தில் வந்தாமூலிகையால் காப்புகட்டி அஷ்டாக சூரணம் பூசி வைக்கவும்.யந்த்ரத்தின் நடுவில் 2X2 அங்குல அளவில் செம்பு தகடு ஒன்றில் 2வது யந்திரத்தை எழுதவும். தகட்டின் நான்கு பகுதிகளிலும் ஒரே அளவில் தர்ப்பையை வைத்து அதன் மீது சதுரவடிவான தகடு அல்லது வாழை அல்லது பாக்கு மட்டையை போட்டு மூடவும்.
மீதமுள்ள மஞ்சள் கலவையை எடுத்து
ஓம் ஸ்ரீ யதீம்ச வசீகரி கார்த்யாயணி ம்ஹா மாயே
சர்வ தோஷ நிவாரணி சகல ரோக நிவர்தினி
அசுர மர்தினீ அப்சார சம்ஹாரிணி
சர்வ சாதகம் ஜயம் விஜயீம் பவது என்ற மந்திரம் 5 முறைகள் சொல்லி அரைவட்ட வடிவில் திரட்டவும். திரட்டிய கலவையின் உள்ளே நேர்வாளை வேரில் கத்தியால் திரி சூலம் வரைந்து வைத்து மூடி அதன்  மீது செஞ்சந்தனம் பூசி முகப்பில் மஞ்சள் கும்குமம் வைக்கவும். இது லக்ன பீடம் எனப்படும் அதன் நான்கு மூலைகளிலும் ஒரேஅளவிலான சந்திர காந்த கல் அல்லது நதிநீரில் கிடைக்கும் கூழாங்கல் மீது  கஸ்தூரிகறுப்பு..சிவனார் அமிர்தம்...அரகஜா...அனுபூத பற்பம் ஆகியவற்றை சம அளவு கலந்து பதனம் செய்து வைக்கவும்.

தயாரிக்கப்பட்ட களபீடம் கிடைக்குமிடம்.

ஸ்ரீஸ்ரீ சைன்யபகவதி பிரதிஷ்டா பீடம்
கடவில் காவு பகவதி கோவில்
செழுங்கலூர். தொடுபுழா. கேரளா.
கள பீடத்தின் விலை. உடையாதது (un breakable) ரூ. 35000
                                             சாதாரணமானது                ரூ. 21000
                                              அஷ்டாங்க பீடம்               ரூ. 55000
அஷ்டாங்க பீடம் குறிப்பிட்ட ஒருவருக்கென்று இல்லாமல் குறிப்பிட்ட பாதிப்புக்கென்றில்லாமல் குடும்பத்திலுள்ள யாருக்கு வேண்டுமானாலும் மாற்றி பயன்படுத்தலாம்.


பூஜமுறைகள்.

களத்தை சுத்தமான இடத்தில் வைத்து  அதன் இடப்புறம் சிறிய தாமிர பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைக்கவும்.வலதுபுறம் நல்லெண்ணை.விளக்கெண்னை.இலுப்பை எண்ணை கலந்த எண்ணை விட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். தனியாக பூர்ணாஹுதி பொருட்களில் இருக்கும் மூலிகை கலவையை எடுத்து வைத்துக்கொள்ளவும்.  (தயாரிக்கப்பட்ட களம் வாங்கினால் அதோடு கொடுக்கப்படும்)

முதல் நாள்.
ஒரு வெற்றிலையில் சிறிது நீர் எடுத்து கள பீடத்தை சுற்றி நான்கு மூலைகளிலும் நீர் விடவும். ஒரு தட்டி சிறிது நெய்வைத்து அதன்மீது சிறிது மஞ்சள் வைத்து அதன்மீது கற்பூரம் வைத்து பீடத்திற்கு தீபாராதனை காட்டவும். கற்பூரம் எரிந்து முடிந்தவுடன்
ஓம்...ஸ்ரீம்...க்லீம்....மஹா மாயே  திரியம்பஹே
மங்களாதரே   கார்த்யாயணி 
ஸ்வயம் சக்தி ரூபம் சக்ராம்ச ஆவாகன கரிஷ்யே...என்று மூன்று முறைகள் சொல்லி கும்குமத்தால் அர்சிக்கவும்.

அடுத்த நாள் முதல் தொடர்ந்து 18 நாட்கள்
தினமும் பீடத்தின்முன்பு  தாமிர பாத்திரத்தில் நீர் வைத்து முதல் நாளை போலவே மூன்று எண்ணை கூட்டி தீபம் ஏற்றி

ஓம்...ஸ்ரீம்  யதி வதீம்ச வசீகரி
ஓம்  ஸ்ரீம்  க்லீம்  யம்  ப்ராண போதினீ  வசி வசி வசி

ஓம் ஸ்ரீம் அஷ்ட ப்ரதன சக்தி
அகண்ட லோக சித்தி வசி வசி வசி


 ஓம் ஸ்ரீம் ஆரோக்ய ப்ரதாயணி
ஸர்வ ஆமய நிவாரணி வசி வசி வசி

ஓம் ஸ்ரீம் ப்ராண சக்தி ஆத்ம சக்தி ஜீவ சக்தி
யோக சக்தி ஸ்வயம் சித்தம் வசி வசி வசி   என்று சொல்லி ஒவ்வொரு முறை வசிவசிவசி என்று முடிக்கும் போது பூர்ணாகுதி மூலிகையை பீடத்தை சுற்றி
லக்ன பீடத்தின் மீது போடவும்.
9 முறைகள் இவ்வாறு செய்தபின் பூஜையில் வைக்கப்பட்ட தண்ணீரை பாதிக்கப்பட்டவருக்கு குடிக்க கொடுத்து. அர்ச்சனை செய்த மூலிகையை உச்சந்தலையில் சிறிது வைக்கவும்.

18 நாட்கள் முடிந்த பிறகு பாதிக்கபட்டவர் எந்த நாளில் பிறந்தாரோ வாராவாரம் அந்த நாளில் பூஜை செய்து வரவும்.
அஷ்டாங்க பீடம் வைத்திருப்பவர்கள் பண்ட சுத்தி ப்ராண சுத்தி ஸ்தல சுத்தி செய்தபின் (பீடத்துடன் பூஜை முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.) வேறு ஒருவருக்கு செய்ய வேண்டும்.


                                                     ஸ்ரீரஸ்து சுபமஸ்து.

                                            லோக ஷேமம் வஹாம்யஹம்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

லக்னம் - ராசி எது முக்கியம்?



உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் ‘பளிச்’ சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார்.

ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை. ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான்.

லக்னம் ஒன்றுதான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது. ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்..


அப்படியானால் இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன? லக்னபலன் வெளியிடுவதில்லையே அது ஏன்?

லக்னம் ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன?

நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள். இவை பொதுவான ராசி வீடுகள்.

நீங்கள் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமானதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.

அதாவது பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும்.

எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.

உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும்.

எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதனையடுத்த கடக லக்னம், தனுசு ராசி என்றும் அதனையடுத்து சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும்.

அதே நேரத்தில் ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது.

லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.

பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல.

இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான். இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல. பலிக்கவும் செய்யாது.

ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படி அல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் 70 சதவிகிதம் வரை துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.

லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.

அது ஏனெனில் லக்னப்படி ஒரு கிரகம் ஒருவருக்கு கெட்டபலன் அளிப்பதாக இருந்தாலும் அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது.

அதாவது, லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.

லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும்.

லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லி விடலாம்.

சரி........

ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது?

லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாறக்கூடியது. ராசி என்பது ஏறத்தாழ இரண்டு நாள் உடையது என்று முன்பே சொன்னேன்....

நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அல்லது நேரக்கருவிகள் பாமரமக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில் சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரசகுடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே துல்லியமாக நேரக்கணக்கை கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.

சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும் இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.

அதன்படியே தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன.

தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்.

( சென்ற வார பால ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

வெள்ளி, 23 ஜனவரி, 2015

லக்னம் - ராசி எது முக்கியம்?



உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் ‘பளிச்’ சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார்.

ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை. ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான்.

லக்னம் ஒன்றுதான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது. ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்..


அப்படியானால் இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன? லக்னபலன் வெளியிடுவதில்லையே அது ஏன்?

லக்னம் ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன?

நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள். இவை பொதுவான ராசி வீடுகள்.

நீங்கள் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமானதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.

அதாவது பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும்.

எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.

உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும்.

எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதனையடுத்த கடக லக்னம், தனுசு ராசி என்றும் அதனையடுத்து சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும்.

அதே நேரத்தில் ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது.

லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.

பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல.

இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான். இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல. பலிக்கவும் செய்யாது.

ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படி அல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் 70 சதவிகிதம் வரை துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.

லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.

அது ஏனெனில் லக்னப்படி ஒரு கிரகம் ஒருவருக்கு கெட்டபலன் அளிப்பதாக இருந்தாலும் அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது.

அதாவது, லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.

லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும்.

லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லி விடலாம்.

சரி........

ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது?

லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாறக்கூடியது. ராசி என்பது ஏறத்தாழ இரண்டு நாள் உடையது என்று முன்பே சொன்னேன்....

நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அல்லது நேரக்கருவிகள் பாமரமக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில் சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரசகுடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே துல்லியமாக நேரக்கணக்கை கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.

சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும் இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.

அதன்படியே தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன.

தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்.

( சென்ற வார பால ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

லக்னம் - ராசி எது முக்கியம்?



உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் ‘பளிச்’ சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார்.

ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை. ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான்.

லக்னம் ஒன்றுதான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது. ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்..


அப்படியானால் இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன? லக்னபலன் வெளியிடுவதில்லையே அது ஏன்?

லக்னம் ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன?

நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள். இவை பொதுவான ராசி வீடுகள்.

நீங்கள் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமானதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.

அதாவது பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும்.

எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.

உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும்.

எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதனையடுத்த கடக லக்னம், தனுசு ராசி என்றும் அதனையடுத்து சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும்.

அதே நேரத்தில் ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது.

லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.

பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல.

இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான். இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல. பலிக்கவும் செய்யாது.

ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படி அல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் 70 சதவிகிதம் வரை துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.

லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.

அது ஏனெனில் லக்னப்படி ஒரு கிரகம் ஒருவருக்கு கெட்டபலன் அளிப்பதாக இருந்தாலும் அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது.

அதாவது, லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.

லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும்.

லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லி விடலாம்.

சரி........

ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது?

லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாறக்கூடியது. ராசி என்பது ஏறத்தாழ இரண்டு நாள் உடையது என்று முன்பே சொன்னேன்....

நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அல்லது நேரக்கருவிகள் பாமரமக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில் சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரசகுடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே துல்லியமாக நேரக்கணக்கை கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.

சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும் இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.

அதன்படியே தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன.

தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்.

( சென்ற வார பால ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?




மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம்.



1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்


இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?

குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது,

பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;

பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,

திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;

மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது.

சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?

முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம்.

இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.

சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.

இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.

சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம்.

மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.

மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.

இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?

குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.

எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.

குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.

நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை/ நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்

வியாழன், 22 ஜனவரி, 2015

செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும்



பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. 

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. 

நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? 

அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்ப்போம். இப்போது செவ்வாய் தோஷத்தைப் பற்றி பார்ப்போம். ஒருவருக்கு திருமணப் பொருத்தத்திற்காக, ஜாதகம் பார்க்கும் பொழுது, செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 

ஏனென்றால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க செவ்வாய் மிக முக்கியமான காரணமாகிறது. ஜனன காலத்தை வைத்து, ஜாதகம் கணிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் லக்னம் என்பது விதியைக் குறிக்கிறது. மதியைக் குறிப்பது சந்திரன். 

மதிக்கும் அதாவது சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் மற்றும் குறிப்பிட்ட ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பை வைத்துத்தான், செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும் என்று சொல்லலாம். லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் இருக்குமிடத்திலிருந்து 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 7-ஆம் இடம், 8-ஆம் இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் ஏற்படும். 

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்திற்கு 2,4,7,8,12-இல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷ ஜாதகமாகும். இதில் ஒரு ஆண் ஜாதகருக்கு தோஷம் இருந்து, பெண் ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால் ஆணிற்கு அல்லது கணவனுக்கு இந்தத் திருமண பந்தத்தில் எவ்வித நலனும் இன்றி, முழுக்க கெடுபலனே நிகழும். 

அதே போல பெண்ணிற்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து, ஆணிற்கு தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால், பெண் அல்லது மனைவிக்கு திருமண உறவால் எவ்விதச் சிறப்பும் இல்லாமல், சீரழிவே ஏற்படும். இதில் ஓர் அறிவியல் உண்மையும் இருக்கிறது. 

செவ்வாய் - அங்காரகன் வெப்பமயமானவர். செவ்வாயை உஷ்ணக்கிரகம் என்றும் குறிப்பிடுவர். செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து, அவர்களின் இரத்தத்தையும் பரிசோதனை செய்து பார்த்ததில், ஏறத்தாழ 90-க்கும் அதிகமான சதவிகிதத்தினருக்கு `ஆர், ஹெச் நெகட்டிவ்'' வாக ரத்தமே இருந்தது தெரியவந்துள்ளது. 

இது அரிய வகை ரத்தம். இந்த வகை ரத்தம் அதே வகை ரத்தத்தோடு சேரும் போது தான் பாதிப்பு இருக்காது. மாறாக வேறு வகை ரத்தத்தோடு, திருமண பந்தம் இருந்தால், உடல் அளவில் ஏற்படும் பாதிப்பு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒவ்வாத ரத்தக் கலப்பு, தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதினால்தான், திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, செவ்வாய்க்கு முதல் மரியாதை கொடுக்கிறார்கள். இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், செவ்வாய் தோஷத்திற்கான விளக்கமும் எளிதாகப் புரிந்து விடும். மைனசும், மைனசும் பிளஸ் ஆவதைப் போல , செவ்வாய் தோஷ ஜாதகத்தோடு, செவ்வாய் தோஷ ஜாதகத்தை இணைத்தால், திருமண பந்தம் சிறக்கும் என நம் முன்னோர்கள் அறிவியல் அடிப்படையிலேயே ஜாதகத்தைக் கணித்திருக்கிறார்கள். 

செவ்வாய் தோஷத்தைப் போலவே, சுக்கிர, ராகு, சனி தோஷங்களையும், ஜாதக ரீதியில் ஒப்பிட்டுப் பார்த்தே, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். மேலெழுந்த வாரியாக 6 பொருத்தம், 8 பொருத்தம் என்று பார்த்து திருமணம் செய்துவிடக் கூடாது. 2,4,7,8,12-இல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பார்த்தோம். 

இதில் ஏகப்பட்ட விதிவிலக்குகளும் இருக்கின்றன. செவ்வாய் அமைவிடத்தை வைத்து மட்டுமே தோஷம் என்று கூறிவிட முடியாது. செவ்வாய் - மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் இருந்து, அவைகள் 4,7-ம் இடங்களால் சுபர் ஆனால் தோஷம் ஏற்படாது. காரணம் சம்பந்தப்பட்ட வீடுகளில், செவ்வாய் நீச்சம் பெற்றோ, உச்சம் பெற்றோ இருக்கும். 

செவ்வாய் சூரியனுடன் இருந்தாலும், சூரியனைப் பார்த்தாலும் தோஷம் கிடையாது. செவ்வாயோடு, சந்திரன் மட்டும் இருந்தாலும் தோஷமில்லை. குரு, புதனோடு சேர்ந்தாலும் தோஷம் கிடையாது. சனி, ராகு, கேது, இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், பார்க்கப்பட்டாலும் செவ்வாய் தோஷம் இல்லை. 

சிம்மம் அல்லது குடும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. இரண்டாமிடம் மிதுனம் அல்லது கன்னியாகி, அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. நான்காமிடம் மேஷம், விருச்சிகமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. 

ஏழாமிடத்தில் கடகம், மகரமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும், எட்டமிடத்தில் தனுசு, மீனமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. செவ்வாய் தோஷத்தைப்பற்றி ஒரு தப்பான கருத்து நிலவுகிறது. செவ்வாய் தோஷத்தால், பெற்றோருக்கு ஆகாது, மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்றெல்லாம் நம்புகிறார்கள். 

ஜோதிட ரீதியாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. செவ்வாய் 1,7,8 ஆகிய இடங்களில் இருக்கும் போது, அது கடுமையான தோஷமாகக் கருதப்படுகிறது. எனவே ஜாதகரீதியாக பொருத்தம் பார்க்கும் போது, அதே போல கடுமையான தோஷமுள்ள ஜாதகத்தை இணைத்தால் பாதிப்பில்லை. செவ்வாய் - 2,12-ஆம் இடங்களில் கடுமை குறைந்து காணப்படுவதால், குறைவான தோஷமே இருக்கும். 

இவற்றோடு தொடர்புடைய ஜாதகமாக இணைத்துப் பொருத்தம் பார்த்தால் நல்லது. 4-இல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 4,2,12-இல் செவ்வாய் உள்ளவர்களாகப் பார்த்து திருமண பந்தம் ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

புதன், 21 ஜனவரி, 2015

ராஜயோக ஜாதகத்தின் சிறப்பு நிலைகள்..


...

அரச ஜாதகத்தின் முதல் யோகமான லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகத்தை விரிவாகப் பார்த்து விட்ட நிலையில் மீதமுள்ள சிறப்பு யோகங்களைப் பற்றிய விளக்கங்களை இப்போது பார்க்கலாம்......

“அரச ஜாதகம்”

புத
சூ, சந்
சுக்
கேது
3-6-1924
லக்
செவ்
ராகு
குரு(வ)
சனி(வ)

தர்மகர்மாதிபதி யோகம்

அடிக்கடி நான் வலியுறுத்திச் சொல்லும் தர்மகர்மாதிபதி யோகம் இவரின் ஜாதகத்தில் முதல்தர வலிமை நிலையில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இங்கே தர்மகர்மாதிபதிகளான குருவும், செவ்வாயும் வலிமை பெற்ற நிலையில் தங்களது வீடுகளையும் பார்த்து லக்னத்தையும் பார்ப்பது மிகவும் விசேஷம். 

அதிலும் இயற்கைப் பாபகிரகமான செவ்வாய் கேந்திர வீட்டிலும் இயற்கைச் சுபரான குருபகவான் திரிகோணத்திலும் இருப்பதோடு இவர்கள் இருவரும் " பாவத் பாவ" அமைப்பிலும் இருப்பது  இன்னும் சிறந்த அமைப்பு.

அதாவது பாக்யாதிபதி குருபகவான் தனது ஒன்பதாம் வீட்டிற்கு ஒன்பதாம் இடமான ஐந்தாமிட விருச்சிகத்தில் அமர்ந்து தனது பாக்கிய ஸ்தானத்தையும் லக்னத்தையும் பார்க்கிறார்.

அதேபோல பத்துக்குடைய ஜீவனாதிபதியான செவ்வாய் தன் பத்தாம் வீட்டிற்கு பத்தாம் வீடான ஏழாமிடத்தில் உச்ச பலம் பெற்று தனது ஜீவன ஸ்தானத்தையும், லக்னத்தையும் பார்க்கிறார்.

இப்படி தர்மகர்மாதிபதிகள் இருவரும் ஒரே நிலையில் தன் வீடுகளையும், லக்னத்தையும் ஒரேநேரத்தில் பார்ப்பது முதல்தரமான ராஜயோக அமைப்பாகும்.

மேலும் இவரது இருபது வயதுகளில் ஆரம்பித்த குருதசை முதல்தான் இவரது யோகங்கள் செயல்பட ஆரம்பித்தன என்பதும், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்து, ஒவ்வொரு தெருவெங்கும் ஒலித்த, இப்போதும் ரசிக்கப்படும் இவரது எழுத்து நவீனங்கள் அப்போதுதான் வெளியாகின என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுத்தின் காரகனான புதன் இங்கே எழுத்து ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு அதிபதியாகி அவரின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதும் கவனிக்கத் தக்கது.

அடுத்து...

கிரகங்களின் சஷ்டாஷ்டக யோகம்    மற்றும்

நண்பர்களின் பார்வை பலன் யோகம்

மேலே பார்த்த இரண்டு யோகங்களையும் விட ஒரு உன்னதமான அமைப்பாக இந்த ஜாதகத்தில் எந்த ஒரு எதிர்த்தன்மையுடைய பகைக்கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வலு இழக்கவில்லை. மாறாக நண்பர்கள் மட்டுமே சம சப்தமமாக பார்த்துக் கொள்கிறார்கள்.

அதாவது நட்புக் கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் கேந்திர கோணங்களிலும், பகைக் கிரகங்கள் சஷ்டாஷ்டக நிலையிலும் உள்ளன.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் நண்பர்களான சுக்கிரன் சனி புதன் மூவரும் தங்களுக்குள் கேந்திர திரிகோண அமைப்பிலும் குரு சூரியன் சந்திரன் செவ்வாய் நால்வரும் அதேபோல் தங்களுக்குள் கேந்திர திரிகோண அமைப்பிலும் உள்ளனர்.

என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நான் பார்த்த வகையில் இந்த ஒரு ஜாதகத்தில் மட்டுமே அனைத்துக் கிரகங்களும் இந்த அமைப் பில் உள்ளன. இதுவே இந்த ஜாதகத்தை மிகச்சிறந்த ‘அரச ஜாதகம்’ என்று சொல்ல வைக்கிறது.

அதாவது காலச்சக்கர அமைப்பின்படி குருவும் புதனும் நேர் எதிர் வீட்டினை உடையவர்கள். செவ்வாயும் சுக்கிரனும் நேர் எதிர் வீட்டினை உடையவர்கள். சனியும் சூரிய சந்திரர்களும் நேர் எதிர் வீட்டினை உடைய எதிர்க்கிரகங்கள் ஆவார்கள்.

அதே எதிர் நிலையில் இந்த ஜாதகத்தில் புதனுக்கு எட்டாமிடத்தில் குருவும், சனிக்கு எட்டாமிடத்தில் சூரிய சந்திரர்களும் , சுக்கிரனுக்கு எட்டாமிடத்தில் செவ்வாயும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பால் நண்பர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்து தங்களைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள். எதிரிகள் மற்றவரைப் பார்த்து பலவீனப்பட்டுக் கொள்ளவில்லை . எனவே எந்த ஒரு கிரகமுமே இந்த ஜாதகத்தில் பார்வைகளால் பலவீனம் அடையவில்லை.

(செவ்வாய் தனது நான்காம் பார்வையால் புதனைப் பார்க்கிறார். செவ்வாயும் புதனும் சமக் கிரகங்கள்தான். மேலும் செவ்வாயின் வீட்டில்தான் புதன் இருக்கிறார் எனும் நிலையில் இது வலுக்குறைவு அல்ல.)

அதே நேரத்தில் புதன் சனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வலுவூட்டிக் கொள்கிறார்கள். குரு லக்னாதிபதியான சந்திரனையும் சூரியனையும் பார்த்து வலுப்படுத்துகிறார். பதிலுக்கு சூரிய சந்திர பார்வைகளால் குரு இன்னும் பொலிவு பெறுகிறார்.

இன்னும் ஒரு சிறப்பாக எதிர்க்கிரகங்களின் சஷ்டாஷ்டக நிலையில் செவ்வாய்க்கு எட்டில் சுக்கிரன் இருந்திருந்தால் செவ்வாயின் எட்டாம் பார்வை சுக்கிரனுக்கு விழுந்து சுக்கிரன் வலிமை இழந்திருக்கக் கூடும்.

ஆனால் இந்த அரச ஜாதகத்தில் செவ்வாய்க்கு ஆறில் சுக்கிரனும், சுக்கிரனுக்கு எட்டில் செவ்வாயும் அமர்ந்து அந்த பலவீனம் கூட இல்லாமல் இந்த அரசனை பரம்பொருள் முழு யோகத்துடன் படைத்த விந்தையை என்னவென்று சொல்வது....?

அடுத்து...

கஜகேசரி யோகம்

பொதுவாக நமது மூல நூல்கள் இந்த யோகம் இருப்பவர் எதிரிகளை ஜெயிப்பார் என்று குறிப்பிடுகின்றன.

நான் எப்பொழுதுமே நமது கிரந்தங்கள் உண்மையை மறைபொருளாகத்தான் குறிப்பிடும் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன்.

ஏனெனில் முக்கியமான சூட்சுமங்களை நீங்கள் புரிந்து கொள்ளும் தகுதிநிலை வரும் போதுதான் சில உண்மைகள் ‘பளிச்’ என்று கண்களைத் திறந்து விட்டது போல உங்களுக்கு புரியும். அதுவரை மேம்போக்காகத்தான் இருப்பீர்கள். சூட்சும விஷயங்கள் பிடிபடாது.

அந்த வகையில் கஜகேசரி யோகம் இருப்பவர் எதிரிகளை ஜெயிப்பார் என்றால் அவருக்கு எதிரிகள் இருப்பார்கள் என்பதே அதில் உள்ள சூட்சுமம்.

அதிலும் கஜம் என்றால் யானை... கேசரி என்றால் சிங்கம்.... இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல எனும் போது இவரின் எதிரிகளும் இவருக்குச் சமமாக மிகவும் வலிமை வாய்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று அர்த்தம்.

இன்னொரு வகையில் சொல்லப் போனால் இவரே தன் செயல்களால் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு பிறகு அவர்களை ஜெயிப்பார் என்று அர்த்தம்.....

எனவே இந்த யோகத்தின் வாயிலாக இவருக்கு ஏற்பட்ட எதிரிகளை நான் விவரிக்கத் தேவை இல்லை.

அடுத்ததாக..

சச யோக பங்கம்

நான் ஏற்கனவே எந்த ஒரு யோக ஜாதகத்திலும் சச யோக அமைப்பு இருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.

மேலும் சச யோகம் என்பது அதிர்ஷ்டம் தரும் நிலை அல்ல எனவும் சொல்லி இருக்கிறேன்.

அதன்படி இந்த பரிபூரண ராஜயோக ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்ற நிலையில் வக்ரம் அடைந்து முற்றிலும் நீச நிலை பெற்று சசயோக பங்க நிலையைப் பெற்றுள்ளது மிகவும் அற்புதமான அமைப்பு.

சனிபகவான் உடல் உழைப்பிற்கும், தரித்திரம், கடன், நோய், உடல்ஊனம், அதிர்ஷ்டமின்மை போன்றவற்றிற்கும் காரணமானவர் என்பதால் ஒரு ஜாதகத்தில் சனி பகவான் நேர்வலிமை இழந்தால்தான் அந்த மனிதர் உடல் உழைப்பின்றி சொகுசு வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் கடன் தரித்திரம் இல்லாத நிலையையும் அடைய முடியும் என்ற எனது சூட்சுமவலு தியரிப்படி இந்த ஜாதகத்தில் சனி பகவான் முற்றிலும் நேர்வலு இழந்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஆயினும் சனிபகவான் உச்சமாகி அஷ்டமாதிபத்தியம் பெற்றதால் சனி தசையின் பிற்பகுதி ஒன்பதரை வருடங்களும் இந்த ஜாதகரால் தொடந்து பத்து வருடங்கள் அரசனாக முடியவில்லை.

மீதியுள்ள யோக விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்..... 

(ஏப் 18-24,2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது