செவ்வாய், 1 மார்ச், 2016

தருப்பைப்புல்



தருப்பைப்புல்
-------------------
தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பைக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

மதச் சடங்குகளில் தருப்பை......
----------------------------------------------
நற்காரியங்களோ அல்லது மற்ற காரியங்களோ செய்யும்போது தருப்பை அணிவது இந்துமதத்தின் ஒரு மரபாகப் பின்பற்றப்படுகிறது. தருப்பையை வலதுகை மோதிர விரலில் அணிவர் இதற்காக தருப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தருப்பையின் நுனிப்பகுதிதான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தருப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தருப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.

ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் எனப்படும் தருப்பை இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தருப்பை தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தருப்பை அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார் சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தருப்பை கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. தருப்பைப்புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை)யன்று சேகரிக்கப்பர். அப்பொழுது மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன.

மருத்துவம்
----------------
நாட்டுப்புற மருத்துவத்தில் தருப்பையானது வயிற்றுக்கடுப்பு மற்றும் பெரும்போக்கு எனப்படும் மாதவிடாய் மிகைப்பு, மற்றும் டையூரிடிக் எனப் பல்வேறுநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வகைகள்

தருப்பையில் ஏழுவகை உண்டு.அவை,
குசை
காசம்
தூர்வை
விரிகி
மஞ்சம்புல்
விசுவாமித்திரம்
யவை
என்பன. மேலும் நுனிப்பகுதி பருத்துக் காணப்படின் அது பெண்தருப்பை எனவும், அடிப்பகுதி பருத்திருப்பின் அது அலி தர்ப்பை எனவும், அடிமுதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தருப்பை எனவும் வழங்கப்படுகிறது.
தருப்பைப்புல்