வியாழன், 20 மார்ச், 2014

ஜாமக்கோள் ஆருடம்


நன்றி : http://geminischoolofastrology.blogspot.in

ஜாமக்கோள் 

ஜாமக்கோள் பிரசன்னம் என்கிற யாமக்கோள் ஆரூடம்
பூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்ந்தார்கள். நம் முன்னோர்கள் விட்டுசென்ற திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர்.
ஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள் மற்றும் தனக்கு முன்னாள் உதயமாகும் நிமித்தத்தை வைத்தும் பலன் சொல்லி வந்தார்கள்.
எட்டு திக்குக்குள் எட்டு ஜாமத்தை வைத்து அமைத்து அதனுள் உதயத்தை ஓடவிட்டு உதயத்திலிருந்து சூட்சும ஆரூடத்தை எடுத்து பலன் சொல்லிவந்தார்கள். நிமித்த ஆரூடம், சகுன ஆரூடம், பறவைகள், கௌரி,பஞ்ச பட்சி, தொடுகுறி சாஸ்திரம் இது போன்ற பல பிரசன்னங்களையும், யுக்திகளையும் ஆராய்ந்து அரசர்கள் மற்ற நாட்டின் மீது படையெடுத்து செல்லவும் , மற்ற நாட்டினர் எப்போது படையெடுப்பார்கள் என அறியவும் பயன்படுத்தி வந்தார்கள்.
சங்க காலத்தில் புறநானூறு சிலப்பதிகாரத்தில் பிரசன்னம் இருப்பதையும், சீவக சிந்தாமணியில் பிரசன்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் தெளிவாக பார்க்கிறோம். வடமொழியில் ராவணேஸ்வரன் இயற்றிய ராவண காவியத்தில் ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சினேந்திர மாலையில் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றி தேவக்கோட்டையை சேர்ந்த ஜோதிடர்கள் சென்ற நூற்றாண்டில் நுணுக்கமான விஷயங்களை பற்றியும் ஆய்வு நோக்குடன் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள். மேலும், கல்யாணராமையர் , ஜோதிடக்கடல் வைத்தியநாதன், அல்லியேந்தல் அருணாச்சலம், திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் போன்றோர் முறைபடுத்தி ஜாமக்கோள் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும் அதை ஆய்வு செய்யகூடிய கணித முறைகள் உண்டு. காணாமல் போனவர், தொலைந்து போன பொருள், தொழிலில் வெற்றி தோல்வி, திருமணத்தை பற்றி, குழந்தையை பற்றி இது போன்ற எந்த கேள்வி அனாலும் நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? என்பதை துல்லியமாக கூறமுடியும்.
நாங்கள் இதுவரை பார்த்த 30,000 க்கும் மேற்பட்ட பிரசன்னங்களின் சாராம்சங்களை ஜோதிட அரசு மாத இதழில் தொடராக எழுதிக்கொண்டு இருக்கிறோம். மேலும் தமிழகத்தில் ஜாமக்கோள் தொடர்பான பயிற்சிகளை சிறப்பாக அளித்துக்கொண்டிருக்கிறோம்.

ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்க தேவையான அம்சங்கள்:

கிரக காரகத்துவம், பாவ காரகத்துவம், யாம காரகத்துவம், ஆரூடம், உதயம், கவிப்பு, சூரிய வீதி, கோச்சாரம், ராசிக்கதிர்கள், தாது மூல ஜீவன், ராகு காலம், எமகண்ட காலம், கோள்களின் குலம், கோள்களின் வடிவு, கோள்களின் காலநிலை, கிரகச் சேர்க்கை பலன் உள்ளிட்ட அம்சங்கள்.


ஆரூடம்
ஆரூடம் என்பது நிமிடங்களால் கணக்கிடப்படுகிறது.
5 நிமிடத்திற்கு 1 ஆரூடம்
1 மணி நேரத்திற்கு 12 ஆரூடம்
12 ஆரூடத்தில் 12 ராசிகள் வரும்



ஆரூடமே அதீத பலம். ஜாதகம் கேட்க வந்தவர் ஏறி(வந்து) நின்ற நிமிடத்தை ஆரூடம் காட்டும்.
ஆரூடம் 1 ராசியை 5 நிமிடத்தில் கடக்கும்.1 ராசிக்கு 9 பாதம். ஆரூடம் 1 பாதம் கடந்து செல்ல 33 செகண்டு எடுத்துக்கொள்கிறது. பிரசன்னத்தில் ஆரூடம் மிகவும் முக்கியமானவை. ஆரூடத்தை நிர்ணயம் செய்தால்தான் கேள்வியின் பலனை நிர்ணயம் செய்ய முடியும்.

உதாரணம்:
7 மணி 23 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது சிம்ம ஆரூடம்.
3 மணி 19 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது கடக ஆரூடம்.
5 மணி 57 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது மீன ஆரூடம்.

உதயம்

உதயம் கணிக்க தேவையானவை
அன்றைய தமிழ் தேதி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்
சூரியன் ஒரு நாளில் 4 நிமிடம் நகர்ந்து செல்கிறது.
4 நிமிடம் என்பது 1 பாகையாகும்.

பகல் உதயம் கணித்தல்
தமிழ் தேதி ஆவணி 5
ஜாதகர் வந்த நேரம்- மதியம் 2 மணி 43 நிமிடம்.
சூரிய அஷ்தமனத்திளிருந்து சூரிய உதயத்தை கழிக்க வேண்டும்.

அன்றைய சூரிய அஸ்தமனம் = 18.35 மணி (ரயில்வே நேரம்)
அன்றைய சூரிய உதயம் = (-) 06.16 மணி (கோவை)
அன்றைய பகல் = 12 .19 மணி
12 மணி 19 நிமிடத்தை மொத்த நிமிடமாக்க
12 x 60 = 720 + 19 = 739 நிமிடம்
739 நிமிடம் 12 ராசிகளுக்கும் உரியதாகும். ஆகவே 1 ராசிக்கு எத்தனை நிமிடம் என கணக்கிட வேண்டும்.
739 / 12 = 61.58 இதை 62 ஆக எடுத்துக்கொள்ளலாம். 62 நிமிடம் பகலில் 1உதயமாகும்.
அன்றைய தமிழ் தேதி ஆவணி 5. ஒரு நாளிற்கு 2 நிமிடம் வீதம் (சூரியன் பகல் நகர்வு) 5 x 2 = 10.
1 உதயமான 62 நிமிடத்தில் இந்த 10 நிமிடத்தை கழிக்கவும். 62 - 10 = 52
52 நிமிடத்தை சூரிய உதயத்துடன் கூட்ட வேண்டும்.
சூரிய உதயம் = 06.16
00.52
07.08 சிம்ம உதய முடிவு
01.02
08.10 கன்னி உதய முடிவு
01.02
09.12 துலா உதய முடிவு
01.02
10.14 விருச்சிக உதய முடிவு
01.02
11.16 தனுசு உதய முடிவு
01.02
12.18 மகர உதய முடிவு
01.02
13.20 கும்ப உதய முடிவு
01.02
14.22 மீன உதய முடிவு
01.02
15.24 மேஷ உதய முடிவு

ஜாதகம் பார்க்க வந்தவர் மதியம் 2 மணி 43 நிமிடத்திற்கு வந்தார். மதியம் 2 மணி 22 நிமிடம் முதல் 3 மணி 24 நிமிடம் வரை மேஷ உதயமாகும்.
43 நிமிடத்திற்கு தனுசு ஆரூடம் ஆகும்.
எனவே வந்தவர் வந்து நின்றது மேஷ உதயம், தனுசு ஆரூடம்.




சூரிய வீதி

கவிப்பு கண்டுபிடிக்க சூரிய வீதி தேவை. எனவே முதலில் சூரியவீதியை பார்ப்போம்.

சூரியன் வீதியை பார்க்கும் முறை:
சூரியனுக்கு தட்சிணாயனம், உத்தராயணம், பூர்வயணம் என்ற மூன்று வீதிகள் உண்டு. வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி மாதங்கள் சூரிய வீதி மேஷம் எனவும்,
கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் மிதுன வீதியாகவும்,
புரட்டாசி, ஐப்பசி, பங்குனி, சித்திரை மாதங்கள் ரிஷப வீதியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலே உள்ள அட்டவணையில் சூரியன் இருக்கும் ராசியே எந்த வீதியில் சூரியன் உள்ளார் என்பதை காட்டுகிறது.

சூரியன் நிற்பது
மேஷ வீதி எனில் ஆரூடத்திலிருந்து மேஷம் வரை கணக்கிடவும்.
ரிஷப வீதி எனில் ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை கணக்கிடவும்.
மிதுன வீதி எனில் ஆரூடத்திலிருந்து மிதுனம் வரை கணக்கிடவும்.


இனி அடுத்ததாக கவிப்பு கணிக்கும் முறையை பற்றி பார்ப்போம்

உதயத்தால் எதிர்காலம் பற்றியும், ஆரூடத்தல் நஷ்டத்தைப் பற்றியும் கவிப்பால் மைந்திருக்கும் ரகசியத்தை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கவிப்பு என்றால் கவிழ்த்து வைத்தல் அல்லது குடை பிடித்தல் என்று கூறப்படுகிறது. சிலசமயம் மீன் இடிப்பவர்கள் வட்ட வடிவமான ஒரு கூடையை தண்ணீரில் கவிழ்த்து விடுவார்கள். பிறகு மேலேயுள்ள துவாரத்தின் வழியாக கையை விட்டு வேண்டிய (பெரிய) மீன்களை எடுத்துக்கொள்வார்கள். அது போல மறைந்திருக்கும் பல விஷயங்களை கவிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஜாமக்கோல் பிரசன்னத்தில் துல்லியமான பலன் பார்ப்பதற்கு கவிப்பு மிக பிரதானமாக செயல்படுகிறது.
கேள்வியாளரின் கேள்வி நடக்குமா நடக்காதா என்பதை கவிப்பே சொல்லிவிடும்.
கேள்வியாளரின் மனநிலை, சேதாரம், நஷ்டம், மறைந்த பொருள், காணாமல் போனவரின் திசை, தொலைந்த பொருள் இருக்கும் இருப்பிடம் இது போன்ற வியக்க வைக்கும் பல விசயங்களை கவிப்பின் மூலம் அறியலாம்.


முதலில் கோசார சூரியன் எந்த வீதியை காட்டுகிறார் என்று பார்க்கவும்
மேஷ வீதியா, ரிஷப வீதியா, மிதுன வீதியா - எந்த வீதியோ அந்த வீதியை ஆரூடத்திளிருந்து எண்ண வேண்டும். எண்ணி வந்த எண்ணிக்கையை உதயம் முதல் எண்ணி போட வேண்டும்.

(Ex .1 ) 17-10-2009 at 15:47:05 கோவை
புரட்டாசி 31, சனிக்கிழமை.



உதயம்

ஆருடம்

கவிப்பு
சூரியன்
கடக உதயம், மகர ஆரூடம், சூரியன் துலாம் ராசி (ரிஷப வீதியில்)
சூரியன் இருப்பது ரிஷப வீதி ஆகும். ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை எண்ண வேண்டும். ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை எண்ணினால் எண்ணிக்கை ஐந்து. உதயத்திளிருது ஐந்தாம் வீடு விருச்சிக ராசி. விருசிகத்தில் கவிப்பு உள்ளது.

(Ex .2 ) 17-1-2009 at 14:38:12 கோவை
தை 4 , சனிக்கிழமை.
கன்னி உதயம், விருச்சிக ஆரூடம், சூரியன் மகர ராசி (மிதுன வீதி). எனவே சூரியன் இருப்பது மிதுன வீதியாகும்.




கவிப்பு



சூரியன்

ஆருடம்

உதயம்
ஆரூடத்திலிருந்து மிதுன ராசி எட்டாம் வீடாக வரும். உதயத்திலிருந்து எண்ணினால் எட்டாம் வீடு மேஷ ராசியாக வரும். எனவே மேஷ கவிப்பு ஆகும்.



(Ex:3) 17-5-2009 at 07:03:12 கோவை
வைகாசி 3, ஞாயிற்றுக்கிழமை

ஆருடம்
சூரியன்
உதயம்
கவிப்பு








மிதுன உதயம், மேஷ ஆரூடம், ரிஷப சூரியன் (மேஷ வீதி)
சூரியன் இருக்கும் வீதி மேஷ வீதியாகும். ஆரூடம் மேஷத்தில் இருப்பதால் மேஷம் என்பது ஒன்றாமிடம். ஆகையால் உதயமே கவிப்பாக வரும்.
இப்போது உதய ஆரூடம், கவிப்பு கணிப்பதை பற்றி பார்த்து விட்டோம்.

அடுத்து வருவது, 'யாமகிரகம் அமைக்கும் முறை'.

யாமகிரகம் அமைக்கும் முறை
பூகோள சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் எட்டு திக்குகள் (திசைகள்) உண்டு. அவை முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற முக்கியமான திசையும் உபதிசைகலான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற உப திசைகளையும் சேர்த்து மொத்தம் எட்டு திக்குகளையும் வைத்து முன்னோர்கள் பலன் சொல்லி வந்தார்கள். ஆகையால் சத்திர ராசியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி சர ராசியுடனும் இன்னொரு பகுதி உபய ராசியுடனும் சேர்த்து பலன் சொல்லி வந்தார்கள்.
ஜாமங்கள் 8, ஜாமக்கோள் கிரகமும் 8, பகல் பொழுது 8 ஜாமம், இரவுப்பொழுது 8 ஜாமம், ஒரு நாளைக்கு 16 ஜாமம்.
ஒரு ஜாமத்திற்கு 1 1/2 மணி நேரம். அந்த 1 1/2 மணி நேரத்தில் 45 பாகையை ஜாமக்கோள் கிரகம் ஒரு ஜாமத்தை கடக்கும். ஸ்திர ராசியில் உள்ள 30 பாகையை சர ராசிக்கு 15 பாகை, உபய ராசிக்கு 15 பாகை எடுத்து பலன் சொல்ல வேண்டும். ஆகையால் ஸ்திர ராசியில் கிரகங்கள் அமராதது போல தெரியும். ஆனால் அது அமரும். அதனுடைய கணித முறையை பலன் சொல்லக்கூடிய பாடத்திட்டத்தில் பார்ப்போம். தற்சமயம் அமராதது போல நினைத்துக்கொள்ளுங்கள்.
ஜாமக்கோள் கிரகங்களின் கிழமை நாதனே மீனத்தில் உதயமாகி anti clock wise -இல் பின்னோக்கி ஒவ்வொரு கிழமை நாதனும் காலை 6:00 மணிக்கு மீனத்தில் உதயமாகி பின்னோக்கி நகரும்.

(பாடம் தொடரும்)

ஜாமக்கோள் ஆருடம் என்பது சாமத்தில் கோள்கள் நிற்கும் நிலையை வைத்தும் கேள்வி கேட்பவர் ஏறி நிற்கும் நிலையை வைத்தும் ஆருடம் மூலம் பிரச்சனைக்கு பதில் அளித்தல் ஆகும்.

ஜாமம்
ஜாமம் என்பது பொழுது ஆகும்.
ஒரு நாளைக்கு 16 ஜாமம்
ஒரு ஜாமத்திற்கு 1.30 மணி நேரம் ஆகும்.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 8 சாமம்
மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை 8 சாமம்

கோள்
கோள் என்பது கிரகங்களைக் குறிக்கும். கிரகங்கள் 8
கதிர் --------------- சூரியன் - ஞாயிற்றுக்கிழமைக்கு அதிபதி
சேய் --------------- செவ்வாய் - செவ்வாய்க்கிழமைக்கு அதிபதி
பொன் --------------- வியாழன் - வியாழக்கிழமைக்கு அதிபதி
மால் --------------- புதன் - புதன்கிழமைக்கு அதிபதி
புகர் --------------- சுக்ரன் - வெள்ளிக்கிழமைக்கு அதிபதி
மந்தன் --------------- சனி - சனிக்கிழமைக்கு அதிபதி
மதி --------------- சந்திரன் - திங்கட்கிழமைக்கு அதிபதி
பாம்பு --------------- ராகு

சாமக்கோள் ஆருடத்தில் கோள்கள் மேற்கண்ட வரிசைப்படி கதிர்,சேய்,பொன்,மால்,புகர்,மந்தன்,மதி,பாம்பு என்ற வரிசைக்கிரமப்படிதான் நிற்கும். ஒரு போதும் மாறாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக