திங்கள், 27 பிப்ரவரி, 2017

கிருஷ்ணமூர்த்தி பத்ததி

கிருஷ்ணமூர்த்தி பத்ததி
நாளைக்கு மதியம் 2.12&க்கு நீங்கள் உங்கள் நண்பருடன் ஓட்டலுக்குப் போவீர்கள். இன்று இரவு 10.14&க்கு உங்கள் தந்தையிடம் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுப்பார். உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தைதான். உங்கள் மகன் போகும் இன்டர்வியூவில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்! இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கண்டிப்பாக குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும்& இதெல்லாம் ஜோதிடத்தின் மூலம் மிகத் துல்லியமாக சொல்லமுடியும் என்றால் நம்பமுடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும் கே.பி. சிஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி மூலம் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார் கே.ஹரிஹரன் இவர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இந்த வாரம் ‘இவர்கள்’ பகுதிக்கு நாம் சந்திக்க இருப்பது இவரைத்தான்!
‘‘கே.பி. சிஸ்டம்ஸ் என்றால் என்ன?’’
‘‘ என் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிறந்தது தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கும் கூத்தூர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் அவர் உருவாக்கிய வழிமுறையையும் சேர்த்துதான் கே.பி. சிஸ்டம்ஸ். அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் தண்ணீர் பகுப்பாய்வுப் பிரிவில் பணிபுரிந்தார்.’’


‘‘ எல்லோரும் ஜோதிடம் பார்ப்பதற்கு இதுதான் முறை என்றிருக்கும்போது அதிலிருந்து மாறுபட்டு செயல்பட அவரைத் தூண்டியது எது?’’
‘‘இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது ஒரே நாள் ஒரே நட்சத்திரம் என்றிருந்தாலும் அவர்களுடைய கல்வி, வேலை, செயல்பாடுகள் அனைத்தும் வேறு வேறாக ஏன் இருக்கவேண்டும் என நினைத்தார். பால்ய வயதிலேயே திருமணம் ஆனவர்களுக்கு ஏன் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் மிகத் தாமதமாக திருமணம் ஆனவர்களுக்கு நிறைய குழந்தைகள். எதனால் இது ஏற்படுகிறது என யோசிக்கத் துவங்கினார்.
 உதாரணமாக ஆற்காடு பிரதர்ஸ் என்றழைக்கப்படும் ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார் இருவருமே இரட்டைப் பிறவிகள். ஆனால், ஒருவர் டாக்டராகவும் இன்னொருவர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டனர். ஏன் இந்த மாற்றம்? இருவருடையதும் ஒரே மாதிரிதானே இருக்கவேண்டும் ஏன் வேறுபட்டு இருக்கவேண்டும் என நினைத்ததன் விளைவே புதிய ஆராய்ச்சியில் இறங்கி அவர் கண்டுபிடித்ததுதான் கே.பி.சிஸ்டம்ஸ். அதற்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிறைய ஜாதகங்களை வாங்கி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்.’’

‘‘இதில் உள்ள ஒரு பெரிய சிறப்பு என்ன?’’
 ‘‘கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் சனி பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சந்திராஷ்டமம், ஏழரை சனி, கிரகங்களுக்குள் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் இவை எதுவும் கிடையாது.
செவ்வாய், சனி, சூரியன் இவை பாபக்கிரகங்கள், 6,8,12& பாப வீடுகள், பாப கிரகங்கள் பாப வீட்டில் இருந்தால் எல்லாம் கெடுதலாகத்தான் முடியும். கேது விருச்சிக ராசியில் 12&வது வீட்டில் இருந்தால் பொருள் பண இழப்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கே.பி. சிஸ்டத்தில் இவை எதுவும் கிடையாது.
கிரகம் நின்ற நட்சத்திரம், அதன் அதிபதி, உப நட்சத்திராதிபதி இவற்றோடு பிறந்த நேரத்தை மட்டும் வைத்துப் பலன் சொல்கிறோம்.  நீங்கள் சொல்லக்கூடிய தகவலகளை கணித அடிப்படையில் கணித்து விஞ்ஞான ரீதியாக அணுகி கிரக அமைப்புகளையும், லக்ன முதல் கணக்கிட்டு கோசார ரீதியாகவும் தெள்ளத் தெளிவாகவும் கே.பி. சிஸ்டம் மூலம் பலன் கூறுகிறோம்.’’


‘‘பிறந்த நேரம் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’’
‘‘குழந்தை பிறந்து எப்போது அழுகிறதோ அப்போதுதான் குழந்தை பிறந்த நேரமாகக் கணக்கிடவேண்டும். நீங்கள் பிறந்த தேதியுடன் உங்கள் ஜாதகத்தையும் கொண்டு வந்தால், நாங்கள் பிறந்த நேரத்தைத் துல்லியமாகக் கணித்துவிடுவோம்.’’
 ‘‘நீங்கள் ஜோதிடப் பலன் சொல்லும் முறையைப் பற்றிக் கூறுங்களேன்?’’
கேள்வி கேட்பவர் ஊர், கேட்கும் நேரம், அவருடைய பிறந்த நேரம். ஒன்றிலிருந்து 249 நம்பர்களுக்குள் ஏதாவது ஒரு எண் இதைச் சொல்லிவிட்டால் போதும் பலனைச் சொல்லிவிடுகிறோம்.’’
‘‘எல்லாம் சரி... அது என்ன 249 நம்பர்?’’
 ‘‘நம்முடைய நட்சத்திரங்கள் 27. கிரகங்கள் 9 இரண்டையும் பெருக்கினால் 243 வரும். சூரியனுக்கு& கார்த்திகை, பூரட்டாதி, விசாகம். குருவுக்கு& புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் என ஆறு நட்சத்திரங்கள் உண்டு. இவற்றையும் சேர்த்தால் கிடைக்கக் கூடியது 249.’’
‘‘எந்தப் பிரச்னைகளுக்கு பலன் சொல்வீர்கள்?’’
‘‘எல்லாவற்றுக்குமே பலன் சொல்லமுடியும். பரீட்சையில் எத்தனை மார்க் கிடைக்கும்? கல்லூரியில் இடம் கிடைக்குமா... அதிலும் கவுன்சலிங் மூலமாகவா, அல்லது மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டிலா, குழந்தை பிறப்பது... அது ஆணா, பெண்ணா... வீடு வாங்கமுடியுமா அது தனி வீடா, ஹவுஸிங் போர்டா, அல்லது ஃப்ளாட்டா. பிஸினஸ் செய்தால் லாபம் கிடைக்குமா. என்ன வேலை கிடைக்கும். திருமணம் ஆகும் நேரம். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்குமா. பதவி உயர்வு, தொலைந்துபோன பொருட்கள், கார் வாங்கும்யோகம், நடத்தக்கூடிய நிறுவனம் நல்ல முறையில் முன்னேறுமா, என்னுடைய குழந்தைகளில் எந்தக் குழந்தை கடைசிவரை என்னை வைத்துக் காப்பாற்றும். பிஹெச்.டி. ஆய்வு பேப்பரை எப்போது சமர்ப்பிப்பேன். பயணத்தில் ஏதாவது விபத்தைச் சந்திப்பேனா, என்னுடைய பிஸினஸில் புது பார்ட்னர் கிடைப்பாரா. பணிமாற்றம், ஊர் மாற்றம், நெருங்கிய உறவுகளால் தொந்தரவு, கடனிலிருந்து வெளியேறும் நாள், நோய், மரணம், மரணம் எந்த ரூபத்தில் வரும் இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் துல்லியமாகப் பலன் கூறமுடியும்.’’

‘‘மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் தந்தை கூறிய பலன்களைப் பற்றி...?
‘‘ எங்கள் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு மலேஷிய அரசு, ‘கிங் ஆஃப் அஸ்ட்ராலஜி’ பட்டம் கொடுத்திருக்கிறது. ஒரு முறை சிங்கப்பூர் போய்விட்டு ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்தார். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அந்த பிரஸ் மீட்டில் நிருபர்கள் பலரும் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதில் ஒரு நிருபர், When you will Die? (நீங்கள் எப்போது மரணமடைவீர்கள்?) என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான மணித்துளிகளை எடுத்துக்கொண்டு, The Next day of your Death (நீ செத்த மறுநாள் நான் இறந்துவிடுவேன்) எனப் பதில் கூறினார்.
அந்தக் கூட்டத்திலேயே, ‘நீங்கள் பயணம் செய்ய இருக்கும் அந்த விமானம் எத்தனை மணிக்கு சென்னை சேரும்?’ என்று கேட்டார்களாம். என் தந்தை சிறிதும் தாமதிக்காமல், ‘4.29&க்கு சென்னையை அடைந்துவிடும்’ என்றாராம். அவர் சொன்ன அந்த நேரத்தில்தான் அந்த விமானம் சென்னையை வந்தடைந்தது.
அதற்கப்புறம் எங்கள் தந்தை மரணமடைந்தது 1972 மார்ச் 30&ம்தேதி, இந்தச் செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியாயின. வெளிநாட்டிலும் பிரசுரமானது. இரண்டு நாட்கள் கழித்து எங்களுக்கு ஒரு இ&மெயில் வந்தது. எங்கள் தந்தையாரின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட நிருபரின் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் என் தந்தையைக் கேள்வி கேட்ட அந்த நிருபர், 1972 மார்ச் 29&ம் தேதி இலங்கையில் ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்பதுதான் அதில் சோகம். இதில் விசேஷம் என்னவென்றால் என் தந்தை தனக்கு மரணம் என்ன தேதி என்பதைக் கணித்ததோடு அந்த நிருபருக்கும் சேர்த்துக் கணித்ததுதான்!’’
‘‘ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. நீங்கள் எத்தனை வருடங்களாக பலன்கள் சொல்லி வருகிறீர்கள் அதுபற்றி...?’’
‘‘கடந்த 25 வருடங்களாக நான் கே.பி. சிஸ்டத்தின் மூலம் பலன் சொல்லி வருகிறேன். ஒரு முறை எங்கள் அலுவலகத்துக்கு மூன்று பெண்கள் கே.பி. சிஸ்டத்தைப் படிக்க வந்தார்கள். என்னிடம் எல்லாம் பேசிவிட்டு, ‘நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது?’ என்றனர்.
‘இப்போது மணி என்ன?’ என்று கேட்டேன். அவர்களும் 6.44 என்று சொல்ல... நீங்கள் இந்த காம்ப்ளெக்ஸை விட்டு 8.02&க்குத்தான் போவீர்கள் என்றேன்.
அவர்கள் சிரித்தார்கள். ‘என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க... இப்போது நாங்கள் இருப்பது முதல் தளத்தில் கீழே இறங்க 8 படிகள் அப்படியே மெதுவாகப் போனாலும் பத்து நிமிடத்தில் வெளியே போய்விடுவோமே!’ என்றனர். நான் தலையைத் தாழ்த்தி, மிகப்பொறுமையுடன், ‘என் குருஜி சொல்லிக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன். கணக்கு தப்பாது. இது மேஜிக் இல்லை. மேத்தமேட்டிக்ஸ்’ என்று பதில் சொல்லிவிட்டு என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அவர்கள் கீழிறங்கினார்கள். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் நாம் மூவரும் வெளியேறி அவர் கூறியது தவறு என உரைக்க வேண்டும் என விரும்பினார்கள். இன்னொருவர், ‘அதான் கீழே வந்து விட்டோமே, இங்கிருக்கும் ஃபுட் வேர்ல்டு ஷாப்புக்குள் இரண்டு பொருட்களை வாங்கிவிட்டு பிறகு போகலாம்’ என முடிவுசெய்து, மூன்று பேரும் சில பொருட்களை வாங்கிவிட்டு, திரும்பிப் பார்த்தால் பில் போடும் இடத்தில் பெரிய க்யூ. இவர்களுக்கு பொறுமையில்லை. ஆனால் வரிசை மெதுவாகவே நகர்ந்தது. இவர்களுக்கு பில் போட்டு முடிக்கும் போது மணி 7.20. வெளியே போகும் வழியில் சிறிது கூட்டம் அதில் நீந்தி கார் பார்க் செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து தங்கள் காரைத்தேட... அதில் சில மணித்துளிகள் கரைந்தன. அங்கிருந்த காவலாளி இந்த மூவரையும் பார்த்து, ‘ஏம்மா! நீங்க காரை நிறுத்துனது ஏ பிளாக், ஆனா இப்ப தேடுறது சி பிளாக் போய் உங்க கார் அங்க நிக்குது’ என வழிகாட்ட... பதற்றத்துடன் காரை எடுத்து வெளியே கிளப்ப, மணி 7.55. முன்னே இரண்டு கார் போக வழி கிடைக்காமல் நிற்க... மெதுவாக காரை எடுத்து ஸ்பென்சர் காம்ப்ளெக்ஸை விட்டு இவர்கள் கார் வெளியே வரும்போது மணி சரியாக 8.02. சந்தோஷமான மகிழ்ச்சியுடன் மறுநாள் என்னிடம் இதைப் பகிர்ந்து கொண்டார்கள்.

என் மகன் சென்னையில் இன்ஜினீயரிங் படித்துவந்தான். ஒரு முறை அவன் எழுதிய பேப்பரில் அவன் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. என்னிடம் கூறினான். அவன் கூறிய நேரம், ஊரின் அச்சாம்சம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, ‘நீ எழுதிய பரீட்சை பேப்பரில் ஒரு பக்கம் திருத்தாமலேயே விட்டுவிட்டார்கள். வேண்டுமானால் அதற்கு மட்டும் தொகையைச் செலுத்தி பார்க்கலாம்’ என்றேன்.
மறுநாள் அவன் படித்த துறையின் பேராசிரியர், இவனுடைய ஆசிரியர் மற்ற துறை ஆசிரியர்கள் குழுமியிருக்க... பேப்பர் கொண்டுவரப்பட்டது. அந்த பேப்பரை துறையின் தலைமை பொறுப்பு அதிகாரி வாங்கிப்பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். நான் கூறியபடியே என் மகனின் விடைத்தாளில் கடைசிப் பக்கம் திருத்தப்படவே இல்லை. அத்தனை ஆசிரியர்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.
இவ்வளவு ஏன்? சென்னையிலிருந்து கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. டெல்லியிலிருந்தும் அதே மாதிரி ஜி.டி. எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இரண்டும் 18 மணி நேர பயணத்துக்குப் பிறகு சந்திக்கும் இடம் நாக்பூர். ஆனால் நீங்கள் கேட்கும்போது வண்டி புறப்பட்ட நேரத்தை வைத்துக் கணக்கிட்டால் எத்தனை மணி, விநாடி சுத்தமாக இது அந்த வண்டியை சந்திக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துவிடலாம்.’’

‘‘தொலைந்து போன பொருட்களைக் கண்டுபிடித்துச் சொல்வீர்களா?’’
‘‘நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். ஒரு முறை சிவகங்கையிலிருந்து ஒரு பெண்மணி எங்களுக்கு போன் செய்தார். அவருடைய பதினெட்டு வயது மகன் காணாமல் போய்விட்டான் என்று! நான் அவர்கள் என்னிடம் பேசிய நேரம், பையனின் பிறந்த நேரம் ஊரின் அச்சாம்சம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, உங்கள் மகன் கடற்கரை ஓரம் உள்ள ஓர் ஊரில் இருக்கிறான் என்றேன். அதற்கு அவர் சிவகங்கையில் கடற்கரையே இல்லையே எங்கு போய்த் தேடுவது என்றார். எனக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த, நீலாங்கரையில் போய்த் தேடுங்கள் என்றேன். என்ன ஆச்சர்யம் நான் கூறியபடியே அவர் மகன் அங்கிருந்தான்.
காரைக்குடியிலிருந்து ஒரு முறை போன். எங்களுடைய பீரோ சாவிக் கொத்தை எங்கே வைத்தோமென்று தெரியவில்லை. தயவுசெய்து கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார். காரைக்குடியில் நகரத்தார் வீடு ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமில்லையா... மிகக் குறைந்த கால அவகாசத்தில் தண்ணீர் அண்டா வைத்திருக்கும் பாத்திரத்துக்கு பக்கத்தில் இருக்கும் என்றேன். மிகுந்த சந்தோஷத்தில் நன்றி கூறினார்கள். ஏனென்றால் அந்த சாவியைத் திறந்துதான் பல லட்ச ரூபாய் பணத்தை அன்று அவர்கள் வங்கியில் செலுத்த வேண்டுமாம். பின்னர் அவரே எங்களுடைய கே.பி. சிஸ்டத்துக்கு மாணவராகவும் ஆனார்.
கொல்கத்தாவில் ஜோதிடர் மாநாடு நடந்தது. நானும் அதில் பங்கேற்றேன். இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல ஜோதிடர்கள் கலந்து கொண்ட மாநாடு. அந்த மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர் ‘நிலவு ஜெயலட்சுமி’ மேடையில் அவர் நிற்கிறார். நிகழ்ச்சியின் பாதியில் அவருடைய வலது காதில் இருந்த தோட்டைக் காணவில்லை. அவருடைய நெருங்கிய உறவினர் என்னிடம் ஓடி வந்து, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்பு தோடு இருந்தது. இப்போது காணவில்லை’ என பதற்றத்துடன் கூறினார். ‘அது கிடைக்குமா... கிடைக்குமென்றால் எத்தனை மணிக்குக் கிடைக்குமென்றார்’. அங்கேயே கணக்குப் போட்டு பார்த்து, ‘தோடு கிடைத்துவிடும் அதுவும் இரவு 7.48&க்கு கிடைக்கும்’ என்றேன். தோடு கிடைக்கும் என்றாலும் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில், சிலர் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களை எழுந்திருக்கச் சொல்லவும் முடியாது. சரி, ‘நான்தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டேனே கண்டிப்பாக கிடைத்துவிடும்’ என உறுதியாக நம்பினார்கள். நான் சொன்ன நேரம் நெருங்க நெருங்க... என்னிடம் பலன் கேட்டவர்களுக்கு பல்ஸ் எகிறியது. சரியாக 7.48&க்கு மேடையில் இருந்த திரைச் சீலையை வேறுகாரணத்துக்காக தூக்க... அந்த மடிப்பில் இருந்து தோடு விழுந்தது.
 ஒரு முறை மியூஸிக் அகாடமியில் ஜோதிடர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் ஜோதிடர் பார்த்தசாரதி மற்றும் அவருடைய மனைவி ஹேமா பார்த்தசாரதி கலந்து கொண்டார்கள். உண்மையான நேரப்படி இரவு 7.30 மணிக்கு கருத்தரங்கம் முடியவேண்டும். நான் வெளிநாடு போகவேண்டிய கட்டாயம் இருந்ததால் எனக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டிய அவசரம். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னிடம் விளையாட்டாக, ‘சார் 7.00 மணிக்குள் பார்த்தசாரதி முடித்துவிடுவாரா?’ என்றார். அவர் இந்தக் கேள்வி கேட்டதால், அதைவைத்து கணக்கிட்டு ‘சார் மன்னிக்கவேண்டும். நான் விமானத்தைப் பிடிக்கப் போகிறேன். ஆனால் இந்த மீட்டிங் முடிய இரவு 9.10&க்கு தான் முடியும். நீங்கள் இன்று சாப்பிடப்போவது 9.15&க்குதான்.’ சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். நான் விமான நிலையத்தில் காத்திருக்கும்போது அந்த நண்பர் கூறியது& அவர் சாப்பிட்ட நேரம் இரவு 9.15&க்குதான்.’’

‘‘உங்களிடம் பலர் படிக்கின்றனர். இதைப் படிக்க என்ன தகுதி வேண்டும். அவர்களும் உங்களைப் போல் துல்லியமாகப் பலன் சொல்வார்களா?’’
‘‘இந்த கே.பி. சிஸ்டத்தைப் படிக்க 36 மணி நேரம் படிக்க வேண்டும். சாதாரண கணக்கு போடும் அறிவு இருக்க வேண்டும். இன்ஜினீயர்களாக இருந்தால் ஒரு வாரம் போதும். இங்கு படித்து முடித்து இதே சென்னையில் மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் ஜோதிடப் பலன் சொல்பவர்கள் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு,
குற்றாலிங்கம் என்பவர் இங்கு படித்தவர். அவர் பார்த்த முதல் வேலை. கட்டடம் கட்டும்போது சென்டரிங் போடுவதற்கு கம்பி கட்டும் வேலைதான்! அவர் இங்கு படித்து முடித்துவிட்டு. இன்று என்னை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து காலை 6 மணிக்கே கணக்கு போட்டிருக்கிறார். அதாவது காலை 11.12&க்குத்தான் அவர் என்னை சந்திக்க முடியும் என சீட்டு எழுதி பாக்கெட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். அன்றைய தினம் 10.30 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டேன். வெளியே நிறைய இடங்களுக்குப் போய்விட்டு அண்ணசாலையில் எல்.ஐ.சி. அருகே டிராஃபிக் சிக்னலில் என் கார் சரியாக நின்றுவிட்டது. சாலையின் அருகே ‘குருஜி’ என ஒருவர் கூப்பிட... திரும்பிப் பார்த்தால் குற்றாலிங்கம். பாக்கெட்டில் இருந்து சீட்டை எடுத்துக் காட்டுகிறார். வாட்ச்சில் மணி பார்த்தேன். சரியாக 11.12.
இன்னொரு மாணவர் இங்கு படித்தவர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் வகுப்பில் வந்த மேடம் போர்டில் பாடங்களை எழுதுஇக்கொண்டிருக்க... திடீரென இவர் எழுந்து, மேடம் எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பாடத்தில் 27&வது லைனில் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். என்று சொல்லியிருக்கிறார்.
மேடத்துக்கு பயங்கரமாக கோபம். எவ்வளவு தைரியம் இருந்தால் நான் எழுதிவைத்திருப்பதில் தவறு இருக்கு என்று சொல்வாய் என்று கடிந்திருக்கிறார். டிபார்ட்மென்டுக்கு வரச்சொல்லிவிட்டார். அங்கு மற்ற துறைகளைச் சேர்ந்த பேராசிரியைகளும், பேராசிரியர்களும் சேர்ந்துவிட. இவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள். இவரும் தைரியமாக போயிருக்கிறார்.
எல்லோரும் கேட்க, அவர் சிறிதும் சளைக்காமல், மேடம் நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் மொத்தம் 33 கோடுகள் இருக்கின்றன. அதில் 27&வது லைனில் நீங்கள் எழுதியிருக்கும் பாடத்தில்தான் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். எனச் சொல்லிவிட... அனைவரும் அந்த கோடில் எழுதியதைப் படித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஷாக்! அந்த மேடம் தவறாகத்தான் எழுதியிருந்தார்கள். அங்கிருந்த அத்தனை பேராசிரியர்களும் கட்டித் தழுவி கேட்டிருக்கிறார்கள். இவரும் கிருஷ்ணமூர்த்தி பத்ததியில்தான் படித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆகவே படித்தவர்,படிக்காதவர் அனைவரும் இங்கு சமம். எல்லோரும் என்னைப்போலவேதான் தயார்படுத்தியிருக்கிறேன். அதுதான் எனக்குப் பெருமையும் கூட.’’

‘‘ உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபம் என்ன?’’
‘‘எங்கள் தந்தைக்கு ஸ்ரீகாஞ்சிப் பெரியவா ஆசிர்வதித்துக் கொடுக்கப்பட்ட உச்சிஷ்ட மஹா கணபதி விக்கிரகம் ஒன்று உள்ளது. அவருடைய 100&வது ஜயந்தி ஆகம சில்ப சதஸ் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அங்கு பெரிய பெரிய ஜோதிட ஜாம்பவான்களும் பெரிய பண்டிதர்களும் வந்திருந்தனர். ஆர்.வெங்கட்ராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லோரும் மேடைக்குக் கீழே அமர்ந்திருக்க, இந்த இடத்துக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எல்லொர் மனதிலும் எழுந்தது. ‘பால ஜோதிடம், நிருத வைத்தியம்’ என்று சொல்வார்கள். நான் உடனே கணித்து 7.58&க்கு இந்த பீடத்தில் வந்தமர்வார் என்றேன். அதே மாதிரி நடந்தது. ஸ்ரீஜேயேந்திரரும் எனக்கு பொன்னாடை போர்த்தி ஐந்நூறு சன்மானமும் கொடுத்தார்கள். இன்றுவரை அதை அப்படியே வைத்திருக்கிறேன்.
‘‘இந்த ஜோதிட முறை எங்கெங்கு பயிற்றுவிக்கப்படுகிறது?’’
‘‘தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூரு, மைசூர் வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் வகுப்புகள் நடைப்பெறுகின்றன. சாஸ்திரா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் அஸ்ட்ராலஜி பாடத்தில் கே.பி.சிஸ்டம்ஸ் ஒரு பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.’’        

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்


ஜோதிட மார்த்தாண்ட திரு கே, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பந்ததி என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்கள் அவைமிக எளிதானதும் சிறந்த்தும் உடன் பலன் அறியவும் உதவுகிறது 12 ராசிகளுக்குறிய 360 பாகையை 249 சம அளவில்லாக பிரித்து ள்ளார்கள்
அந்த கிரகத்திற்குறிய தசா வரடங்களுக்குப் பொறுத்து உதாரணம் புனர்பூசம்-13-பாகை-20-கலைநட்சத்திரமென்றால் அதற்குறிய கிரகம் குருதசை 16-வருடம் அதை 800.ல். பெருக்கி.
120ல்.வகுக்க-பாகை-1- கலை-46-விகலை-40. வரும் இதேபோல்ஒவ்வோர் கிரகத்திற்குறிய
தசையை மேலே கூறப்பட்ட முறையில் கணித்தால் அதற்குரிய பாகை. கலை. விகலை.
கிடைக்கும்
கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்,
நட்சத்திராஅதிபதிகள்-பாகை –கலை- விகலை
1-குரு - 1 - 46 - 40.
2-சனி - 2- 06- 40.
3-புதன் - 1- 53- 20.
4-கேது- 0 - 46- 40.
5-சுக்கிரன் - 2- 13- 20-
6-சூரியன் - 0 - 46- 40.
7-சந்திரன் - 10- 06- 40.
8-செவ்வாய்- 0- 46- 40 .
9- ராகு - 2- 00 - 00.
மொத்தம்- 13- 20- 00.
உப உப நட்சத்திராதிபதிகள்வருமாறு,
மேலும் அந்தஉபநட்சத்திராதிபதியை. 9-பாகமாகப் பிரிக்கும்பொழுது உதாரணமாக குருவிற்குரிய 1.பாகை46.கலை. 40.விகலை .அதன் பாகை-கலையை-விகலையாகபிரித்து. 6400-விகலையை அதை 16ல்- பெருக்கி.102400-வரும் அதை 120ல். வகுக்க வரும் கலை14- விகலை13- உபவிகலை20.வரும் அதன் உப உபநட்சத்திராதிபதி குரு
உப உபநட்சத்திராதிபதியை உப நட்சத்திராதிபதி திசாவருடத்தில் பெருக்கவேண்டும்
கே .பி.முறை உப உப நட்சத்திராதிபதிகள்,
கலை- விகலை-உபவிகலை,
1-குரு- 14- 13- 20.
2-சனி- 16 - 53- 20.
3-புதன் -15- 06- 40.
4-கேது- 06- 13- 20.
5-சுக்கிரன் -17- 46- 40.
6-சூரியன் – 05- 20- 00.
7-சந்திரன் -08- 53- 20.
8-செவ்வாய் -06- 13- 20.
9- ராகு- 16- 00-00.
மொத்தம்-1-பாகை-46-கலை-40-விகலை.
கே.பி. பேராசியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முறையில்
ஒவ்வோரு ராசிக்கும் 30 பாகை என்றும் அந்த 12ராசிகளையும் 360பாகையை
249பிரிவுகளாக்கியுள்ளார் 9கிரகங்களும் பகர்ந்தளித்து அதன்படிபாகை கலை அதிபர்கள் என்றும்
குறிப்பிடுகிறார் அவர் ஒருநட்சத்திரமானது ராசியில் 13பாகை 20கலை9கிரகங்களும் வரிசைக்
கிரம்மாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள் 1.ராசாதிபதி 2,நட்சத்திராதிபதி3,துணைநட்சத்திராதிபர்
அந்த வீட்டின் பலனை அந்த பாகை கலைக்குறிய நட்சத்திராதிபதியும் துணை நட்சத்திராதிபதியும்
தான் பலன் செய்வார்கள்
எந்த பாவத்தின் பலனை அறிய வேண்டுமனல் அந்த பாவத்தின் ஆரம்ப பாகை கலை கண்டு
அதன் நட்சத்திராதிபதி துணை நட்சத்திராதிபதி யார் எனகாண வேண்டும்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

கிருஸ்ண மூர்த்தி பத்ததி முறையில் சோதிடம்

கிருஷ்ணமூர்த்தி பத்ததி அறிமுகம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பது தமிழகத்தை சேர்ந்த திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஜோதிட பலன் கூறும் முறையாகும். இதை சுருக்கமாக கே.பி. ஜோதிடம் என குறிப்பிடுவர். இந்த முறையின் முக்கிய அம்சம் உப நட்சத்திர பகுப்பு முறையாகும். நட்சத்திரம் என்றால் என்னவென்று பெரும்பாலனவர்களுக்குத் தெரியும். உப நட்சத்திரம் என்றால் தெரியாது. பாரம்பரிய ஜோதிட முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் விம்சோத்தரி தசையானது, தசா – புக்தி - அந்தரம் என பிரிக்கப்பட்டுள்ளதை ஜோதிட சாஸ்திரத்தில் ஞானமுள்ளவர்கள் அறிவர். அந்த தசா-புக்தி-அந்தரங்களையே, திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நட்சத்திரம், உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிட முறையில் தசா-புக்தி பலன்கள் கூறும்போது பெரும்பாலன பாரம்பரிய ஜோதிடர்கள் நடப்பு புக்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் கூறுவார்கள். “நடப்பு புக்தி நாதன், எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் உள்ளானோ,அந்த சார கிரகம் நின்ற பாவ பலனையும்,அந்த சார கிரகம் ஆதிபத்தியம் பெற்ற பாவ பலன்களையும் ஜாதகர் அந்த புக்தி காலத்தில் அனுபவிப்பார்” என்பதே பாரம்பரிய ஜோதிடர்கள் பயன்படுத்தி வந்த எளிமையான விதியாகும். திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த ஒரே ஒரு விதியை மட்டும் பாவ சக்கரத்திற்குள் புகுத்திப்பார்த்து, ஒரு குறிப்பிட்ட பாவ பலனை அந்த பாவத்தின் ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதியே (புக்தி நாதன்) நிர்ணயம் செய்வார் என முடிவு செய்துள்ளார். அதன்படி “ நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பாவத்தின் ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதியோ அல்லது அவர் நின்ற நட்சத்திர அதிபதியோ, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவத்திற்கு சாதகமான பாவங்களை குறிகாட்டினால்,ஆய்வுக்குரிய பாவ பலன்கள் நிச்சயமாக நடக்கும்,பாதகமான பாவங்களைக்குறிகாட்டினால், ஆய்வுக்குரிய பாவ பலன்கள் நடக்காது”. இந்த ஒரே விதியை மட்டும் பயன்படுத்தி அனைத்து வாழ்க்கை சம்பவங்களும் ஜாதகத்தில் ஆராயப்படுகிறது.
“ஒரு குறிப்பிட்ட பாவத்தில் நின்ற கிரகம்,அந்த பாவத்தில் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்கள்,அந்த பாவாதிபதி மற்றும் அந்த பாவாதிபதியின் சாரம் பெற்ற கிரகங்கள் ஆகியவையே அந்த பாவத்தின் குறிகாட்டிகளாகும்”. ஜாதகங்களை ஆய்வு செய்யும்போது கவனித்துப்பார்த்தால், சில சமயங்களில் 9 கிரகங்களுமே ஒரு பாவத்திற்கு குறிகாட்டிகளாக அமைவதைக்காணலாம். இத்தகைய சூழ்நிலைகளில் கால நிர்ணயம் செய்வது சற்று கடினமாக இருக்கும். இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் ஆளும் கிரகங்கள் என்ற ஒரு யுக்தியை இந்த முறையில் திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புகுத்தியுள்ளார்.
ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேரத்தில், உதயமான லக்கினத்தின் அதிபதி,லக்கினம் அமைந்த நட்சத்திர அதிபதி,சந்திரன் நின்ற ராசி அதிபதி,சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி,அன்றைய கிழமை அதிபதி ஆகிய ஐந்து கிரகங்களும் ஆளும் கிரகங்கள் எனப்படும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் சாதக,பாதக பாவங்கள் உண்டு.உதாரணமாக 7ம் பாவத்திற்கு சாதக பாவங்கள் 2-7-11ம் பாவங்களாகும்.1-6-10 ம் பாவங்கள் பாதகமான பாவங்களாகும். அதாவது ஒவ்வொரு சாதக பாவத்திற்கும்,அதற்கு 12ம் பாவம் பாதக பாவமாகும். 2க்கு 12ம் பாவம் 1ம்பாவமாகும்,7க்கு 12 ம் பாவம் 6ம் பாவமாகும்,11க்கு 12 ம் பாவம் 10ம் பாவமாகும்.
கிருஷ்ணமூர்த்தி பத்ததியை கற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
உப நட்சத்திரம் என்றால் என்ன?
பாவம் என்றால் என்ன?
பாவ ஆரம்ப முனை என்றால் என்ன?
பாவ குறிகாட்டிகள் என்றால் என்ன?
சாதக பாவங்கள் என்றால் என்ன?
பாதக பாவங்கள் என்றால் என்ன?
ஆளும் கிகங்கள் என்றால் என்ன?
பயனுள்ள நிலைகள் என்றால் என்ன?
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போல், கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் கேந்திரம்,பணபரம்,அபோக்லிமம், உபசயம், திரிகோணம்,மறைவுஸ்தானம் போன்ற பாவக பகுப்பு முறைகள் கிடையாது. கிரகங்கள் ராசிகளில் நின்ற பலன்,கிரகங்கள் பாவங்களில் நின்ற பலன், கிரகங்கள் பாவங்களைப்பார்த்த பலன், கிரகங்கள் பிற கிரகங்களை பார்த்த பலன், கிரக சேர்க்கை பலன், கிரக உச்ச பலன்,கிரக நீச்ச பலன்,அஷ்டக வர்கம், சோடச வர்கம் என எதுவும் கிடையாது.
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போல், கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள் கிடையாது.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்


எனக்கு ஏழரைச்சனி, எனக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள். இவை தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். கோள்களின் நகர்வுகளை அறிந்து கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும், என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார். கோள்களின் நகர்வு பற்றி அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.

நாசா விஞ்ஞானி கார்ல் சாகன், நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும், என்று குறிப்பிடுகிறார். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும். வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து கொள்ளவில்லை.

பொதுவாக, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு, சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர். 9 கோடி மைல் துõரத்தில் இருக்கும் பூமி, சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. ஆனால், சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி, அதற்கான சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது. மிக நீண்ட தொலைவில் இருப்பதால், சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.

தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது. அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு, 210 டிகிரியிலுள்ள விருச்சிக ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம். சரி...இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம். பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா

கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும்.

அதாவது, கிரகங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். தற்போதைய சனிப்பெயர்ச்சியில், சூரியனுக்கு மிகவும் அருகில், அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும். எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம். எனவே, சூரியனுக்கு சற்று மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். முதலில், பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும். அ ங்கிருந்து பல லட்சம் கோடி மைல் துõரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.

அப்போது சூரிய மண்டலத்தையும், அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும். சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும்.

இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம். சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும்.

10 அல்லது 15 நிமிடம் இந்த திய õனத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் ÷ மலானதாகவோ இருக்கும். உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும். கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும். சூரியன்- எலும்பு, சந்திரன்- ரத்தஓட்டம், செவ்வாய்- மஜ்ஜை, புதன்- தோல், வியாழன்- மூளை, சுக்கிரன்- உயிர்ச்சக்தி, சனி- நரம்பு மண்டலம். அந் தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம்.

மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம். இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.