திங்கள், 27 பிப்ரவரி, 2017

கிருஷ்ணமூர்த்தி பத்ததி

கிருஷ்ணமூர்த்தி பத்ததி
நாளைக்கு மதியம் 2.12&க்கு நீங்கள் உங்கள் நண்பருடன் ஓட்டலுக்குப் போவீர்கள். இன்று இரவு 10.14&க்கு உங்கள் தந்தையிடம் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுப்பார். உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தைதான். உங்கள் மகன் போகும் இன்டர்வியூவில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்! இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கண்டிப்பாக குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும்& இதெல்லாம் ஜோதிடத்தின் மூலம் மிகத் துல்லியமாக சொல்லமுடியும் என்றால் நம்பமுடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும் கே.பி. சிஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி மூலம் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார் கே.ஹரிஹரன் இவர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இந்த வாரம் ‘இவர்கள்’ பகுதிக்கு நாம் சந்திக்க இருப்பது இவரைத்தான்!
‘‘கே.பி. சிஸ்டம்ஸ் என்றால் என்ன?’’
‘‘ என் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிறந்தது தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கும் கூத்தூர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் அவர் உருவாக்கிய வழிமுறையையும் சேர்த்துதான் கே.பி. சிஸ்டம்ஸ். அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் தண்ணீர் பகுப்பாய்வுப் பிரிவில் பணிபுரிந்தார்.’’


‘‘ எல்லோரும் ஜோதிடம் பார்ப்பதற்கு இதுதான் முறை என்றிருக்கும்போது அதிலிருந்து மாறுபட்டு செயல்பட அவரைத் தூண்டியது எது?’’
‘‘இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது ஒரே நாள் ஒரே நட்சத்திரம் என்றிருந்தாலும் அவர்களுடைய கல்வி, வேலை, செயல்பாடுகள் அனைத்தும் வேறு வேறாக ஏன் இருக்கவேண்டும் என நினைத்தார். பால்ய வயதிலேயே திருமணம் ஆனவர்களுக்கு ஏன் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் மிகத் தாமதமாக திருமணம் ஆனவர்களுக்கு நிறைய குழந்தைகள். எதனால் இது ஏற்படுகிறது என யோசிக்கத் துவங்கினார்.
 உதாரணமாக ஆற்காடு பிரதர்ஸ் என்றழைக்கப்படும் ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார் இருவருமே இரட்டைப் பிறவிகள். ஆனால், ஒருவர் டாக்டராகவும் இன்னொருவர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டனர். ஏன் இந்த மாற்றம்? இருவருடையதும் ஒரே மாதிரிதானே இருக்கவேண்டும் ஏன் வேறுபட்டு இருக்கவேண்டும் என நினைத்ததன் விளைவே புதிய ஆராய்ச்சியில் இறங்கி அவர் கண்டுபிடித்ததுதான் கே.பி.சிஸ்டம்ஸ். அதற்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிறைய ஜாதகங்களை வாங்கி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்.’’

‘‘இதில் உள்ள ஒரு பெரிய சிறப்பு என்ன?’’
 ‘‘கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் சனி பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சந்திராஷ்டமம், ஏழரை சனி, கிரகங்களுக்குள் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் இவை எதுவும் கிடையாது.
செவ்வாய், சனி, சூரியன் இவை பாபக்கிரகங்கள், 6,8,12& பாப வீடுகள், பாப கிரகங்கள் பாப வீட்டில் இருந்தால் எல்லாம் கெடுதலாகத்தான் முடியும். கேது விருச்சிக ராசியில் 12&வது வீட்டில் இருந்தால் பொருள் பண இழப்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கே.பி. சிஸ்டத்தில் இவை எதுவும் கிடையாது.
கிரகம் நின்ற நட்சத்திரம், அதன் அதிபதி, உப நட்சத்திராதிபதி இவற்றோடு பிறந்த நேரத்தை மட்டும் வைத்துப் பலன் சொல்கிறோம்.  நீங்கள் சொல்லக்கூடிய தகவலகளை கணித அடிப்படையில் கணித்து விஞ்ஞான ரீதியாக அணுகி கிரக அமைப்புகளையும், லக்ன முதல் கணக்கிட்டு கோசார ரீதியாகவும் தெள்ளத் தெளிவாகவும் கே.பி. சிஸ்டம் மூலம் பலன் கூறுகிறோம்.’’


‘‘பிறந்த நேரம் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’’
‘‘குழந்தை பிறந்து எப்போது அழுகிறதோ அப்போதுதான் குழந்தை பிறந்த நேரமாகக் கணக்கிடவேண்டும். நீங்கள் பிறந்த தேதியுடன் உங்கள் ஜாதகத்தையும் கொண்டு வந்தால், நாங்கள் பிறந்த நேரத்தைத் துல்லியமாகக் கணித்துவிடுவோம்.’’
 ‘‘நீங்கள் ஜோதிடப் பலன் சொல்லும் முறையைப் பற்றிக் கூறுங்களேன்?’’
கேள்வி கேட்பவர் ஊர், கேட்கும் நேரம், அவருடைய பிறந்த நேரம். ஒன்றிலிருந்து 249 நம்பர்களுக்குள் ஏதாவது ஒரு எண் இதைச் சொல்லிவிட்டால் போதும் பலனைச் சொல்லிவிடுகிறோம்.’’
‘‘எல்லாம் சரி... அது என்ன 249 நம்பர்?’’
 ‘‘நம்முடைய நட்சத்திரங்கள் 27. கிரகங்கள் 9 இரண்டையும் பெருக்கினால் 243 வரும். சூரியனுக்கு& கார்த்திகை, பூரட்டாதி, விசாகம். குருவுக்கு& புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் என ஆறு நட்சத்திரங்கள் உண்டு. இவற்றையும் சேர்த்தால் கிடைக்கக் கூடியது 249.’’
‘‘எந்தப் பிரச்னைகளுக்கு பலன் சொல்வீர்கள்?’’
‘‘எல்லாவற்றுக்குமே பலன் சொல்லமுடியும். பரீட்சையில் எத்தனை மார்க் கிடைக்கும்? கல்லூரியில் இடம் கிடைக்குமா... அதிலும் கவுன்சலிங் மூலமாகவா, அல்லது மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டிலா, குழந்தை பிறப்பது... அது ஆணா, பெண்ணா... வீடு வாங்கமுடியுமா அது தனி வீடா, ஹவுஸிங் போர்டா, அல்லது ஃப்ளாட்டா. பிஸினஸ் செய்தால் லாபம் கிடைக்குமா. என்ன வேலை கிடைக்கும். திருமணம் ஆகும் நேரம். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்குமா. பதவி உயர்வு, தொலைந்துபோன பொருட்கள், கார் வாங்கும்யோகம், நடத்தக்கூடிய நிறுவனம் நல்ல முறையில் முன்னேறுமா, என்னுடைய குழந்தைகளில் எந்தக் குழந்தை கடைசிவரை என்னை வைத்துக் காப்பாற்றும். பிஹெச்.டி. ஆய்வு பேப்பரை எப்போது சமர்ப்பிப்பேன். பயணத்தில் ஏதாவது விபத்தைச் சந்திப்பேனா, என்னுடைய பிஸினஸில் புது பார்ட்னர் கிடைப்பாரா. பணிமாற்றம், ஊர் மாற்றம், நெருங்கிய உறவுகளால் தொந்தரவு, கடனிலிருந்து வெளியேறும் நாள், நோய், மரணம், மரணம் எந்த ரூபத்தில் வரும் இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் துல்லியமாகப் பலன் கூறமுடியும்.’’

‘‘மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் தந்தை கூறிய பலன்களைப் பற்றி...?
‘‘ எங்கள் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு மலேஷிய அரசு, ‘கிங் ஆஃப் அஸ்ட்ராலஜி’ பட்டம் கொடுத்திருக்கிறது. ஒரு முறை சிங்கப்பூர் போய்விட்டு ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்தார். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அந்த பிரஸ் மீட்டில் நிருபர்கள் பலரும் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதில் ஒரு நிருபர், When you will Die? (நீங்கள் எப்போது மரணமடைவீர்கள்?) என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான மணித்துளிகளை எடுத்துக்கொண்டு, The Next day of your Death (நீ செத்த மறுநாள் நான் இறந்துவிடுவேன்) எனப் பதில் கூறினார்.
அந்தக் கூட்டத்திலேயே, ‘நீங்கள் பயணம் செய்ய இருக்கும் அந்த விமானம் எத்தனை மணிக்கு சென்னை சேரும்?’ என்று கேட்டார்களாம். என் தந்தை சிறிதும் தாமதிக்காமல், ‘4.29&க்கு சென்னையை அடைந்துவிடும்’ என்றாராம். அவர் சொன்ன அந்த நேரத்தில்தான் அந்த விமானம் சென்னையை வந்தடைந்தது.
அதற்கப்புறம் எங்கள் தந்தை மரணமடைந்தது 1972 மார்ச் 30&ம்தேதி, இந்தச் செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியாயின. வெளிநாட்டிலும் பிரசுரமானது. இரண்டு நாட்கள் கழித்து எங்களுக்கு ஒரு இ&மெயில் வந்தது. எங்கள் தந்தையாரின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட நிருபரின் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் என் தந்தையைக் கேள்வி கேட்ட அந்த நிருபர், 1972 மார்ச் 29&ம் தேதி இலங்கையில் ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்பதுதான் அதில் சோகம். இதில் விசேஷம் என்னவென்றால் என் தந்தை தனக்கு மரணம் என்ன தேதி என்பதைக் கணித்ததோடு அந்த நிருபருக்கும் சேர்த்துக் கணித்ததுதான்!’’
‘‘ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. நீங்கள் எத்தனை வருடங்களாக பலன்கள் சொல்லி வருகிறீர்கள் அதுபற்றி...?’’
‘‘கடந்த 25 வருடங்களாக நான் கே.பி. சிஸ்டத்தின் மூலம் பலன் சொல்லி வருகிறேன். ஒரு முறை எங்கள் அலுவலகத்துக்கு மூன்று பெண்கள் கே.பி. சிஸ்டத்தைப் படிக்க வந்தார்கள். என்னிடம் எல்லாம் பேசிவிட்டு, ‘நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது?’ என்றனர்.
‘இப்போது மணி என்ன?’ என்று கேட்டேன். அவர்களும் 6.44 என்று சொல்ல... நீங்கள் இந்த காம்ப்ளெக்ஸை விட்டு 8.02&க்குத்தான் போவீர்கள் என்றேன்.
அவர்கள் சிரித்தார்கள். ‘என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க... இப்போது நாங்கள் இருப்பது முதல் தளத்தில் கீழே இறங்க 8 படிகள் அப்படியே மெதுவாகப் போனாலும் பத்து நிமிடத்தில் வெளியே போய்விடுவோமே!’ என்றனர். நான் தலையைத் தாழ்த்தி, மிகப்பொறுமையுடன், ‘என் குருஜி சொல்லிக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன். கணக்கு தப்பாது. இது மேஜிக் இல்லை. மேத்தமேட்டிக்ஸ்’ என்று பதில் சொல்லிவிட்டு என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அவர்கள் கீழிறங்கினார்கள். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் நாம் மூவரும் வெளியேறி அவர் கூறியது தவறு என உரைக்க வேண்டும் என விரும்பினார்கள். இன்னொருவர், ‘அதான் கீழே வந்து விட்டோமே, இங்கிருக்கும் ஃபுட் வேர்ல்டு ஷாப்புக்குள் இரண்டு பொருட்களை வாங்கிவிட்டு பிறகு போகலாம்’ என முடிவுசெய்து, மூன்று பேரும் சில பொருட்களை வாங்கிவிட்டு, திரும்பிப் பார்த்தால் பில் போடும் இடத்தில் பெரிய க்யூ. இவர்களுக்கு பொறுமையில்லை. ஆனால் வரிசை மெதுவாகவே நகர்ந்தது. இவர்களுக்கு பில் போட்டு முடிக்கும் போது மணி 7.20. வெளியே போகும் வழியில் சிறிது கூட்டம் அதில் நீந்தி கார் பார்க் செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து தங்கள் காரைத்தேட... அதில் சில மணித்துளிகள் கரைந்தன. அங்கிருந்த காவலாளி இந்த மூவரையும் பார்த்து, ‘ஏம்மா! நீங்க காரை நிறுத்துனது ஏ பிளாக், ஆனா இப்ப தேடுறது சி பிளாக் போய் உங்க கார் அங்க நிக்குது’ என வழிகாட்ட... பதற்றத்துடன் காரை எடுத்து வெளியே கிளப்ப, மணி 7.55. முன்னே இரண்டு கார் போக வழி கிடைக்காமல் நிற்க... மெதுவாக காரை எடுத்து ஸ்பென்சர் காம்ப்ளெக்ஸை விட்டு இவர்கள் கார் வெளியே வரும்போது மணி சரியாக 8.02. சந்தோஷமான மகிழ்ச்சியுடன் மறுநாள் என்னிடம் இதைப் பகிர்ந்து கொண்டார்கள்.

என் மகன் சென்னையில் இன்ஜினீயரிங் படித்துவந்தான். ஒரு முறை அவன் எழுதிய பேப்பரில் அவன் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. என்னிடம் கூறினான். அவன் கூறிய நேரம், ஊரின் அச்சாம்சம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, ‘நீ எழுதிய பரீட்சை பேப்பரில் ஒரு பக்கம் திருத்தாமலேயே விட்டுவிட்டார்கள். வேண்டுமானால் அதற்கு மட்டும் தொகையைச் செலுத்தி பார்க்கலாம்’ என்றேன்.
மறுநாள் அவன் படித்த துறையின் பேராசிரியர், இவனுடைய ஆசிரியர் மற்ற துறை ஆசிரியர்கள் குழுமியிருக்க... பேப்பர் கொண்டுவரப்பட்டது. அந்த பேப்பரை துறையின் தலைமை பொறுப்பு அதிகாரி வாங்கிப்பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். நான் கூறியபடியே என் மகனின் விடைத்தாளில் கடைசிப் பக்கம் திருத்தப்படவே இல்லை. அத்தனை ஆசிரியர்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.
இவ்வளவு ஏன்? சென்னையிலிருந்து கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. டெல்லியிலிருந்தும் அதே மாதிரி ஜி.டி. எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இரண்டும் 18 மணி நேர பயணத்துக்குப் பிறகு சந்திக்கும் இடம் நாக்பூர். ஆனால் நீங்கள் கேட்கும்போது வண்டி புறப்பட்ட நேரத்தை வைத்துக் கணக்கிட்டால் எத்தனை மணி, விநாடி சுத்தமாக இது அந்த வண்டியை சந்திக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துவிடலாம்.’’

‘‘தொலைந்து போன பொருட்களைக் கண்டுபிடித்துச் சொல்வீர்களா?’’
‘‘நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். ஒரு முறை சிவகங்கையிலிருந்து ஒரு பெண்மணி எங்களுக்கு போன் செய்தார். அவருடைய பதினெட்டு வயது மகன் காணாமல் போய்விட்டான் என்று! நான் அவர்கள் என்னிடம் பேசிய நேரம், பையனின் பிறந்த நேரம் ஊரின் அச்சாம்சம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, உங்கள் மகன் கடற்கரை ஓரம் உள்ள ஓர் ஊரில் இருக்கிறான் என்றேன். அதற்கு அவர் சிவகங்கையில் கடற்கரையே இல்லையே எங்கு போய்த் தேடுவது என்றார். எனக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த, நீலாங்கரையில் போய்த் தேடுங்கள் என்றேன். என்ன ஆச்சர்யம் நான் கூறியபடியே அவர் மகன் அங்கிருந்தான்.
காரைக்குடியிலிருந்து ஒரு முறை போன். எங்களுடைய பீரோ சாவிக் கொத்தை எங்கே வைத்தோமென்று தெரியவில்லை. தயவுசெய்து கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார். காரைக்குடியில் நகரத்தார் வீடு ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமில்லையா... மிகக் குறைந்த கால அவகாசத்தில் தண்ணீர் அண்டா வைத்திருக்கும் பாத்திரத்துக்கு பக்கத்தில் இருக்கும் என்றேன். மிகுந்த சந்தோஷத்தில் நன்றி கூறினார்கள். ஏனென்றால் அந்த சாவியைத் திறந்துதான் பல லட்ச ரூபாய் பணத்தை அன்று அவர்கள் வங்கியில் செலுத்த வேண்டுமாம். பின்னர் அவரே எங்களுடைய கே.பி. சிஸ்டத்துக்கு மாணவராகவும் ஆனார்.
கொல்கத்தாவில் ஜோதிடர் மாநாடு நடந்தது. நானும் அதில் பங்கேற்றேன். இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல ஜோதிடர்கள் கலந்து கொண்ட மாநாடு. அந்த மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர் ‘நிலவு ஜெயலட்சுமி’ மேடையில் அவர் நிற்கிறார். நிகழ்ச்சியின் பாதியில் அவருடைய வலது காதில் இருந்த தோட்டைக் காணவில்லை. அவருடைய நெருங்கிய உறவினர் என்னிடம் ஓடி வந்து, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்பு தோடு இருந்தது. இப்போது காணவில்லை’ என பதற்றத்துடன் கூறினார். ‘அது கிடைக்குமா... கிடைக்குமென்றால் எத்தனை மணிக்குக் கிடைக்குமென்றார்’. அங்கேயே கணக்குப் போட்டு பார்த்து, ‘தோடு கிடைத்துவிடும் அதுவும் இரவு 7.48&க்கு கிடைக்கும்’ என்றேன். தோடு கிடைக்கும் என்றாலும் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில், சிலர் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களை எழுந்திருக்கச் சொல்லவும் முடியாது. சரி, ‘நான்தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டேனே கண்டிப்பாக கிடைத்துவிடும்’ என உறுதியாக நம்பினார்கள். நான் சொன்ன நேரம் நெருங்க நெருங்க... என்னிடம் பலன் கேட்டவர்களுக்கு பல்ஸ் எகிறியது. சரியாக 7.48&க்கு மேடையில் இருந்த திரைச் சீலையை வேறுகாரணத்துக்காக தூக்க... அந்த மடிப்பில் இருந்து தோடு விழுந்தது.
 ஒரு முறை மியூஸிக் அகாடமியில் ஜோதிடர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் ஜோதிடர் பார்த்தசாரதி மற்றும் அவருடைய மனைவி ஹேமா பார்த்தசாரதி கலந்து கொண்டார்கள். உண்மையான நேரப்படி இரவு 7.30 மணிக்கு கருத்தரங்கம் முடியவேண்டும். நான் வெளிநாடு போகவேண்டிய கட்டாயம் இருந்ததால் எனக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டிய அவசரம். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னிடம் விளையாட்டாக, ‘சார் 7.00 மணிக்குள் பார்த்தசாரதி முடித்துவிடுவாரா?’ என்றார். அவர் இந்தக் கேள்வி கேட்டதால், அதைவைத்து கணக்கிட்டு ‘சார் மன்னிக்கவேண்டும். நான் விமானத்தைப் பிடிக்கப் போகிறேன். ஆனால் இந்த மீட்டிங் முடிய இரவு 9.10&க்கு தான் முடியும். நீங்கள் இன்று சாப்பிடப்போவது 9.15&க்குதான்.’ சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். நான் விமான நிலையத்தில் காத்திருக்கும்போது அந்த நண்பர் கூறியது& அவர் சாப்பிட்ட நேரம் இரவு 9.15&க்குதான்.’’

‘‘உங்களிடம் பலர் படிக்கின்றனர். இதைப் படிக்க என்ன தகுதி வேண்டும். அவர்களும் உங்களைப் போல் துல்லியமாகப் பலன் சொல்வார்களா?’’
‘‘இந்த கே.பி. சிஸ்டத்தைப் படிக்க 36 மணி நேரம் படிக்க வேண்டும். சாதாரண கணக்கு போடும் அறிவு இருக்க வேண்டும். இன்ஜினீயர்களாக இருந்தால் ஒரு வாரம் போதும். இங்கு படித்து முடித்து இதே சென்னையில் மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் ஜோதிடப் பலன் சொல்பவர்கள் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு,
குற்றாலிங்கம் என்பவர் இங்கு படித்தவர். அவர் பார்த்த முதல் வேலை. கட்டடம் கட்டும்போது சென்டரிங் போடுவதற்கு கம்பி கட்டும் வேலைதான்! அவர் இங்கு படித்து முடித்துவிட்டு. இன்று என்னை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து காலை 6 மணிக்கே கணக்கு போட்டிருக்கிறார். அதாவது காலை 11.12&க்குத்தான் அவர் என்னை சந்திக்க முடியும் என சீட்டு எழுதி பாக்கெட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். அன்றைய தினம் 10.30 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டேன். வெளியே நிறைய இடங்களுக்குப் போய்விட்டு அண்ணசாலையில் எல்.ஐ.சி. அருகே டிராஃபிக் சிக்னலில் என் கார் சரியாக நின்றுவிட்டது. சாலையின் அருகே ‘குருஜி’ என ஒருவர் கூப்பிட... திரும்பிப் பார்த்தால் குற்றாலிங்கம். பாக்கெட்டில் இருந்து சீட்டை எடுத்துக் காட்டுகிறார். வாட்ச்சில் மணி பார்த்தேன். சரியாக 11.12.
இன்னொரு மாணவர் இங்கு படித்தவர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் வகுப்பில் வந்த மேடம் போர்டில் பாடங்களை எழுதுஇக்கொண்டிருக்க... திடீரென இவர் எழுந்து, மேடம் எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பாடத்தில் 27&வது லைனில் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். என்று சொல்லியிருக்கிறார்.
மேடத்துக்கு பயங்கரமாக கோபம். எவ்வளவு தைரியம் இருந்தால் நான் எழுதிவைத்திருப்பதில் தவறு இருக்கு என்று சொல்வாய் என்று கடிந்திருக்கிறார். டிபார்ட்மென்டுக்கு வரச்சொல்லிவிட்டார். அங்கு மற்ற துறைகளைச் சேர்ந்த பேராசிரியைகளும், பேராசிரியர்களும் சேர்ந்துவிட. இவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள். இவரும் தைரியமாக போயிருக்கிறார்.
எல்லோரும் கேட்க, அவர் சிறிதும் சளைக்காமல், மேடம் நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் மொத்தம் 33 கோடுகள் இருக்கின்றன. அதில் 27&வது லைனில் நீங்கள் எழுதியிருக்கும் பாடத்தில்தான் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். எனச் சொல்லிவிட... அனைவரும் அந்த கோடில் எழுதியதைப் படித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஷாக்! அந்த மேடம் தவறாகத்தான் எழுதியிருந்தார்கள். அங்கிருந்த அத்தனை பேராசிரியர்களும் கட்டித் தழுவி கேட்டிருக்கிறார்கள். இவரும் கிருஷ்ணமூர்த்தி பத்ததியில்தான் படித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆகவே படித்தவர்,படிக்காதவர் அனைவரும் இங்கு சமம். எல்லோரும் என்னைப்போலவேதான் தயார்படுத்தியிருக்கிறேன். அதுதான் எனக்குப் பெருமையும் கூட.’’

‘‘ உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபம் என்ன?’’
‘‘எங்கள் தந்தைக்கு ஸ்ரீகாஞ்சிப் பெரியவா ஆசிர்வதித்துக் கொடுக்கப்பட்ட உச்சிஷ்ட மஹா கணபதி விக்கிரகம் ஒன்று உள்ளது. அவருடைய 100&வது ஜயந்தி ஆகம சில்ப சதஸ் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அங்கு பெரிய பெரிய ஜோதிட ஜாம்பவான்களும் பெரிய பண்டிதர்களும் வந்திருந்தனர். ஆர்.வெங்கட்ராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லோரும் மேடைக்குக் கீழே அமர்ந்திருக்க, இந்த இடத்துக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எல்லொர் மனதிலும் எழுந்தது. ‘பால ஜோதிடம், நிருத வைத்தியம்’ என்று சொல்வார்கள். நான் உடனே கணித்து 7.58&க்கு இந்த பீடத்தில் வந்தமர்வார் என்றேன். அதே மாதிரி நடந்தது. ஸ்ரீஜேயேந்திரரும் எனக்கு பொன்னாடை போர்த்தி ஐந்நூறு சன்மானமும் கொடுத்தார்கள். இன்றுவரை அதை அப்படியே வைத்திருக்கிறேன்.
‘‘இந்த ஜோதிட முறை எங்கெங்கு பயிற்றுவிக்கப்படுகிறது?’’
‘‘தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூரு, மைசூர் வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் வகுப்புகள் நடைப்பெறுகின்றன. சாஸ்திரா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் அஸ்ட்ராலஜி பாடத்தில் கே.பி.சிஸ்டம்ஸ் ஒரு பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.’’        

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்


ஜோதிட மார்த்தாண்ட திரு கே, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பந்ததி என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்கள் அவைமிக எளிதானதும் சிறந்த்தும் உடன் பலன் அறியவும் உதவுகிறது 12 ராசிகளுக்குறிய 360 பாகையை 249 சம அளவில்லாக பிரித்து ள்ளார்கள்
அந்த கிரகத்திற்குறிய தசா வரடங்களுக்குப் பொறுத்து உதாரணம் புனர்பூசம்-13-பாகை-20-கலைநட்சத்திரமென்றால் அதற்குறிய கிரகம் குருதசை 16-வருடம் அதை 800.ல். பெருக்கி.
120ல்.வகுக்க-பாகை-1- கலை-46-விகலை-40. வரும் இதேபோல்ஒவ்வோர் கிரகத்திற்குறிய
தசையை மேலே கூறப்பட்ட முறையில் கணித்தால் அதற்குரிய பாகை. கலை. விகலை.
கிடைக்கும்
கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்,
நட்சத்திராஅதிபதிகள்-பாகை –கலை- விகலை
1-குரு - 1 - 46 - 40.
2-சனி - 2- 06- 40.
3-புதன் - 1- 53- 20.
4-கேது- 0 - 46- 40.
5-சுக்கிரன் - 2- 13- 20-
6-சூரியன் - 0 - 46- 40.
7-சந்திரன் - 10- 06- 40.
8-செவ்வாய்- 0- 46- 40 .
9- ராகு - 2- 00 - 00.
மொத்தம்- 13- 20- 00.
உப உப நட்சத்திராதிபதிகள்வருமாறு,
மேலும் அந்தஉபநட்சத்திராதிபதியை. 9-பாகமாகப் பிரிக்கும்பொழுது உதாரணமாக குருவிற்குரிய 1.பாகை46.கலை. 40.விகலை .அதன் பாகை-கலையை-விகலையாகபிரித்து. 6400-விகலையை அதை 16ல்- பெருக்கி.102400-வரும் அதை 120ல். வகுக்க வரும் கலை14- விகலை13- உபவிகலை20.வரும் அதன் உப உபநட்சத்திராதிபதி குரு
உப உபநட்சத்திராதிபதியை உப நட்சத்திராதிபதி திசாவருடத்தில் பெருக்கவேண்டும்
கே .பி.முறை உப உப நட்சத்திராதிபதிகள்,
கலை- விகலை-உபவிகலை,
1-குரு- 14- 13- 20.
2-சனி- 16 - 53- 20.
3-புதன் -15- 06- 40.
4-கேது- 06- 13- 20.
5-சுக்கிரன் -17- 46- 40.
6-சூரியன் – 05- 20- 00.
7-சந்திரன் -08- 53- 20.
8-செவ்வாய் -06- 13- 20.
9- ராகு- 16- 00-00.
மொத்தம்-1-பாகை-46-கலை-40-விகலை.
கே.பி. பேராசியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முறையில்
ஒவ்வோரு ராசிக்கும் 30 பாகை என்றும் அந்த 12ராசிகளையும் 360பாகையை
249பிரிவுகளாக்கியுள்ளார் 9கிரகங்களும் பகர்ந்தளித்து அதன்படிபாகை கலை அதிபர்கள் என்றும்
குறிப்பிடுகிறார் அவர் ஒருநட்சத்திரமானது ராசியில் 13பாகை 20கலை9கிரகங்களும் வரிசைக்
கிரம்மாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள் 1.ராசாதிபதி 2,நட்சத்திராதிபதி3,துணைநட்சத்திராதிபர்
அந்த வீட்டின் பலனை அந்த பாகை கலைக்குறிய நட்சத்திராதிபதியும் துணை நட்சத்திராதிபதியும்
தான் பலன் செய்வார்கள்
எந்த பாவத்தின் பலனை அறிய வேண்டுமனல் அந்த பாவத்தின் ஆரம்ப பாகை கலை கண்டு
அதன் நட்சத்திராதிபதி துணை நட்சத்திராதிபதி யார் எனகாண வேண்டும்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

கிருஸ்ண மூர்த்தி பத்ததி முறையில் சோதிடம்

கிருஷ்ணமூர்த்தி பத்ததி அறிமுகம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பது தமிழகத்தை சேர்ந்த திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஜோதிட பலன் கூறும் முறையாகும். இதை சுருக்கமாக கே.பி. ஜோதிடம் என குறிப்பிடுவர். இந்த முறையின் முக்கிய அம்சம் உப நட்சத்திர பகுப்பு முறையாகும். நட்சத்திரம் என்றால் என்னவென்று பெரும்பாலனவர்களுக்குத் தெரியும். உப நட்சத்திரம் என்றால் தெரியாது. பாரம்பரிய ஜோதிட முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் விம்சோத்தரி தசையானது, தசா – புக்தி - அந்தரம் என பிரிக்கப்பட்டுள்ளதை ஜோதிட சாஸ்திரத்தில் ஞானமுள்ளவர்கள் அறிவர். அந்த தசா-புக்தி-அந்தரங்களையே, திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நட்சத்திரம், உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிட முறையில் தசா-புக்தி பலன்கள் கூறும்போது பெரும்பாலன பாரம்பரிய ஜோதிடர்கள் நடப்பு புக்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் கூறுவார்கள். “நடப்பு புக்தி நாதன், எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் உள்ளானோ,அந்த சார கிரகம் நின்ற பாவ பலனையும்,அந்த சார கிரகம் ஆதிபத்தியம் பெற்ற பாவ பலன்களையும் ஜாதகர் அந்த புக்தி காலத்தில் அனுபவிப்பார்” என்பதே பாரம்பரிய ஜோதிடர்கள் பயன்படுத்தி வந்த எளிமையான விதியாகும். திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த ஒரே ஒரு விதியை மட்டும் பாவ சக்கரத்திற்குள் புகுத்திப்பார்த்து, ஒரு குறிப்பிட்ட பாவ பலனை அந்த பாவத்தின் ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதியே (புக்தி நாதன்) நிர்ணயம் செய்வார் என முடிவு செய்துள்ளார். அதன்படி “ நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பாவத்தின் ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதியோ அல்லது அவர் நின்ற நட்சத்திர அதிபதியோ, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவத்திற்கு சாதகமான பாவங்களை குறிகாட்டினால்,ஆய்வுக்குரிய பாவ பலன்கள் நிச்சயமாக நடக்கும்,பாதகமான பாவங்களைக்குறிகாட்டினால், ஆய்வுக்குரிய பாவ பலன்கள் நடக்காது”. இந்த ஒரே விதியை மட்டும் பயன்படுத்தி அனைத்து வாழ்க்கை சம்பவங்களும் ஜாதகத்தில் ஆராயப்படுகிறது.
“ஒரு குறிப்பிட்ட பாவத்தில் நின்ற கிரகம்,அந்த பாவத்தில் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்கள்,அந்த பாவாதிபதி மற்றும் அந்த பாவாதிபதியின் சாரம் பெற்ற கிரகங்கள் ஆகியவையே அந்த பாவத்தின் குறிகாட்டிகளாகும்”. ஜாதகங்களை ஆய்வு செய்யும்போது கவனித்துப்பார்த்தால், சில சமயங்களில் 9 கிரகங்களுமே ஒரு பாவத்திற்கு குறிகாட்டிகளாக அமைவதைக்காணலாம். இத்தகைய சூழ்நிலைகளில் கால நிர்ணயம் செய்வது சற்று கடினமாக இருக்கும். இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் ஆளும் கிரகங்கள் என்ற ஒரு யுக்தியை இந்த முறையில் திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புகுத்தியுள்ளார்.
ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேரத்தில், உதயமான லக்கினத்தின் அதிபதி,லக்கினம் அமைந்த நட்சத்திர அதிபதி,சந்திரன் நின்ற ராசி அதிபதி,சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி,அன்றைய கிழமை அதிபதி ஆகிய ஐந்து கிரகங்களும் ஆளும் கிரகங்கள் எனப்படும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் சாதக,பாதக பாவங்கள் உண்டு.உதாரணமாக 7ம் பாவத்திற்கு சாதக பாவங்கள் 2-7-11ம் பாவங்களாகும்.1-6-10 ம் பாவங்கள் பாதகமான பாவங்களாகும். அதாவது ஒவ்வொரு சாதக பாவத்திற்கும்,அதற்கு 12ம் பாவம் பாதக பாவமாகும். 2க்கு 12ம் பாவம் 1ம்பாவமாகும்,7க்கு 12 ம் பாவம் 6ம் பாவமாகும்,11க்கு 12 ம் பாவம் 10ம் பாவமாகும்.
கிருஷ்ணமூர்த்தி பத்ததியை கற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
உப நட்சத்திரம் என்றால் என்ன?
பாவம் என்றால் என்ன?
பாவ ஆரம்ப முனை என்றால் என்ன?
பாவ குறிகாட்டிகள் என்றால் என்ன?
சாதக பாவங்கள் என்றால் என்ன?
பாதக பாவங்கள் என்றால் என்ன?
ஆளும் கிகங்கள் என்றால் என்ன?
பயனுள்ள நிலைகள் என்றால் என்ன?
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போல், கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் கேந்திரம்,பணபரம்,அபோக்லிமம், உபசயம், திரிகோணம்,மறைவுஸ்தானம் போன்ற பாவக பகுப்பு முறைகள் கிடையாது. கிரகங்கள் ராசிகளில் நின்ற பலன்,கிரகங்கள் பாவங்களில் நின்ற பலன், கிரகங்கள் பாவங்களைப்பார்த்த பலன், கிரகங்கள் பிற கிரகங்களை பார்த்த பலன், கிரக சேர்க்கை பலன், கிரக உச்ச பலன்,கிரக நீச்ச பலன்,அஷ்டக வர்கம், சோடச வர்கம் என எதுவும் கிடையாது.
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போல், கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள் கிடையாது.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்


எனக்கு ஏழரைச்சனி, எனக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள். இவை தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். கோள்களின் நகர்வுகளை அறிந்து கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும், என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார். கோள்களின் நகர்வு பற்றி அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.

நாசா விஞ்ஞானி கார்ல் சாகன், நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும், என்று குறிப்பிடுகிறார். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும். வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து கொள்ளவில்லை.

பொதுவாக, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு, சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர். 9 கோடி மைல் துõரத்தில் இருக்கும் பூமி, சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. ஆனால், சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி, அதற்கான சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது. மிக நீண்ட தொலைவில் இருப்பதால், சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.

தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது. அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு, 210 டிகிரியிலுள்ள விருச்சிக ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம். சரி...இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம். பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா

கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும்.

அதாவது, கிரகங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். தற்போதைய சனிப்பெயர்ச்சியில், சூரியனுக்கு மிகவும் அருகில், அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும். எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம். எனவே, சூரியனுக்கு சற்று மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். முதலில், பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும். அ ங்கிருந்து பல லட்சம் கோடி மைல் துõரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.

அப்போது சூரிய மண்டலத்தையும், அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும். சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும்.

இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம். சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும்.

10 அல்லது 15 நிமிடம் இந்த திய õனத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் ÷ மலானதாகவோ இருக்கும். உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும். கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும். சூரியன்- எலும்பு, சந்திரன்- ரத்தஓட்டம், செவ்வாய்- மஜ்ஜை, புதன்- தோல், வியாழன்- மூளை, சுக்கிரன்- உயிர்ச்சக்தி, சனி- நரம்பு மண்டலம். அந் தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம்.

மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம். இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.

வியாழன், 3 நவம்பர், 2016

நவாவரண பூஜை

நவாவரண பூஜை


நவாவரண பூஜை என்றால் என்ன தெரியுமா
காஞ்சி காமாட்சி அம்மன் தலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னைக்கு பணி விடைகள் செய்த 75 வயதாகும் நீலக்கல்சி.என்.ராமச்சந்திர சாஸ்திரிகள் இதற்கு விளக்கம் அளித்தார்அவர் கூறியதாவது:-காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமிசரஸ்வதிபார்வதிஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள்பார்வதியின் (காமாட்சிஇரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமிநவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும்விசேஷமாகும்சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம்(பிலாஹாசம்பிம்பம் (காமாட்சிசூட்சமம் (ஸ்ரீசக்கரம்ஆக வீற்றிருக்கிறாள்.அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறதுஅந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்துகாமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டைசெய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போதுஇந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்இந்தசக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடுநடத்தப்படுகிறதுஇது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக்கொண்டதுஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவதுஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதைஆவரண தேவதைகள்யோகினி தேவதைகள்பரிவாரம் தரும் சக்திதேவதைகள்மற்றும் சித்தியை தரும் அணிமாலகிமாமகிமாஈப்சித்வ்வசித்வபிரகாம்யபுத்திகிச்சாபிராப்தி ஆகிய 9 சித்திதேவதைகள் உள்ளனர்.பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும்இந்தப் பூஜை மிகச் சிறப்பானதுவிசேஷமான பலன்களைத் தரவல்லதுநன்கு உபதேசம்பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும்நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும்,சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டைசெய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமிதினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடானகோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்எனவேஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டுஇந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரணபூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.எனது இத்தனை வருட அனுபவத்தில் இத்தலத்தில் ஸ்ரீசக்கரத்துக்கு செய்யப்படும் நவாவரண பூஜையில் கலந்து கொண்டுவாழ்வில் மேன்மை பெற்றுள்ள எத்தனையோ பேரை பார்த்துள்ளேன்.

திதி நித்யா தேவியர்-2

திதி நித்யா தேவியர்


திதி நித்யா தேவியர் யார்? அவர்கள் பராக்ரமம் என்ன?

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம். அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுதலையாவோம், இக பர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.
கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரரால் பிரசித்தமான ‘சுபாகம தந்த்ர பஞ்சகம்’ என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ‘தந்த்ர ராஜ தந்த்ரம்’ என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

சர்வம் சக்தி மயம். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன?

1.காமேஸ்வரி

‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

வழிபடு பலன்கள்:
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

2. பகமாலினி

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள்.

மந்திரம்:
ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ த்விதியை, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி.
வழிபடு பலன்கள்:
வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

3. நித்யக்லின்னா
நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:
ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்:
சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.

வழிபடு பலன்:
குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.

4. பேருண்டா நித்யா
அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள்.
புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.
                                                                                                                                               
வழிபடு பலன்கள்:
விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.

5. வஹ்னிவாஸினி
அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.

மந்திரம்:
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.
வழிபடு பலன்கள்:
நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6. மஹா வஜ்ரேஸ்வரி
இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ தசமி.

வழிபடு பலன்:
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.

7. சிவதூதி
இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:
ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்:
நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8. த்வரிதா
இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும்.

மந்திரம்:
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.
வழிபடு பலன்கள்:
எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

9. குலஸுந்தரி
குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர்.

மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:
இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10. நித்யா
அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி.

மந்திரம்:
ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்:
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

11. நீலபதாகா
நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.
மந்திரம்:
ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.
வழிபடு பலன்கள்:
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12. விஜயா
இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள்.

மந்திரம்:
ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.
வழிபடு பலன்கள்:
எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.

13. ஸர்வமங்களா
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

மந்திரம்:
ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்:
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.

14. ஜ்வாலா மாலினி

இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை
வழிபடு பலன்கள்:
எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15. சித்ரா
திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

மந்திரம்:
ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.