வியாழன், 3 நவம்பர், 2016

நவாவரண பூஜை

நவாவரண பூஜை


நவாவரண பூஜை என்றால் என்ன தெரியுமா
காஞ்சி காமாட்சி அம்மன் தலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னைக்கு பணி விடைகள் செய்த 75 வயதாகும் நீலக்கல்சி.என்.ராமச்சந்திர சாஸ்திரிகள் இதற்கு விளக்கம் அளித்தார்அவர் கூறியதாவது:-காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமிசரஸ்வதிபார்வதிஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள்பார்வதியின் (காமாட்சிஇரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமிநவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும்விசேஷமாகும்சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம்(பிலாஹாசம்பிம்பம் (காமாட்சிசூட்சமம் (ஸ்ரீசக்கரம்ஆக வீற்றிருக்கிறாள்.அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறதுஅந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்துகாமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டைசெய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போதுஇந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்இந்தசக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடுநடத்தப்படுகிறதுஇது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக்கொண்டதுஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவதுஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதைஆவரண தேவதைகள்யோகினி தேவதைகள்பரிவாரம் தரும் சக்திதேவதைகள்மற்றும் சித்தியை தரும் அணிமாலகிமாமகிமாஈப்சித்வ்வசித்வபிரகாம்யபுத்திகிச்சாபிராப்தி ஆகிய 9 சித்திதேவதைகள் உள்ளனர்.பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும்இந்தப் பூஜை மிகச் சிறப்பானதுவிசேஷமான பலன்களைத் தரவல்லதுநன்கு உபதேசம்பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும்நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும்,சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டைசெய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமிதினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடானகோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்எனவேஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டுஇந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரணபூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.எனது இத்தனை வருட அனுபவத்தில் இத்தலத்தில் ஸ்ரீசக்கரத்துக்கு செய்யப்படும் நவாவரண பூஜையில் கலந்து கொண்டுவாழ்வில் மேன்மை பெற்றுள்ள எத்தனையோ பேரை பார்த்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக