வெள்ளி, 1 மே, 2015

நினைத்தது நடக்க



திங்கள், 24 மார்ச், 2014

நீங்கள் செல்வந்தராக ஒரு யோசனை

                           
எப்படி சேட்டுக்கள்மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமேஅன்னதானம் செய்வதற்கு  ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.


இரண்டாவதாகவீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்கெட்ட வாசனைஅடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவதுவீட்டில் நறுமணம் எப்போதும்கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை  அதிகம் பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூலஉடலையும்சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும்தேய்பிறையில் பிரதமைமுதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளனதிதிகள் என்றால் கலைகள் என்றும்பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேசகலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள்சேட்டுகள்மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக  இருக்க முடிகின்றது.தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர்அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்இதை அறியும் வரை தின வாழ்க்கையேசோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம்மகிழ்ச்சி,எனவாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.


பிரம்மாவிஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்இவர்இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார்ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள்உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள்விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

.
 
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்துவெளியிடும்அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்உதாரணமாகஅமாவாசை காலைமணி 10.20 வரைபின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள் அமாவாசை திதிமுடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணிதியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணிநேரத்திற்குள் சுமார் 5 நொடிப் பொழுதுகள்  திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்தமொத்தப் பிரபஞ்சமும் வரும்.


 பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் ( பாக்டீரியாபுல்,பூண்டு ,மரம்,யானைதிமிங்கலம்,சிறுத்தைகழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்கடல்பசு,கடல் பாசிகள்ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லிஆந்தைபுறாகிளிகாட்டெருமைகாண்டாமிருகம்நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்புசுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதுகிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.ஒன்றுநிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்யவேண்டும்மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சிலமாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது)கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்ததுமனவலிமையைப்பொறுத்ததுதிருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள்வழங்குகிறார்.
 தியானம் வீட்டிலோகோயிலிலோ இருக்க வேண்டும்தியானம் செய்யும் நேரம்அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாதுவயிறு காலியாகஇருக்க வேண்டும்சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவுஅதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில்இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாதுமனக் கவனத்தை புருவ மத்தியில்அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவதுஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில்தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை. அமைதியுடன்வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம்பணக்காரனாவதுநோய் தீரகடன்தீர,எதிர்ப்புகள் விலகநிலத்தகராறுதீரபதவி உயர்வு கிடைக்கபிரிந்தவர் சேர ,வழக்குவெற்றி எதுவானாலும்ஏதாவது ஒன்று மட்டும்நினைத்த வண்ணம் கண்களை மூடிஇருந்தால்போதும்.தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம்பாதிக்காதுஇந்த தியானத்தை ஜாதிமதம்,இனம்மொழி கடந்து மனிதராகப்பிறந்தஎவரும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக