ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர்-5


                     
         
பால முருகனைப் போல வாசிலில் வந்து நிற்கும் சங்கரனைக் கண்டதும் அப்பெண்மணிக்கு கண்ணீர் வந்துவிட்டது, "அடடா!பரம ஏழையான என்னிடம் இந்த தெய்வக் குழந்தைக்குப் பிச்சை போட எதுவுமே இல்லையே"என்று மனம் குமுறினாள்,
அவ்வீட்டிலிருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியைக் கொண்டு வந்து சங்கரனின் பிட்சாபாத்திரத்தில் போட்டாள். அவளது நல்ல உள்ளத்தை அன்பு வெள்ளத்தைக் கண்டு சங்கரன் உருகிவிட்டான். உடனே செல்வத்திற்கு தெய்வமான லஷ்மியைக் குறித்து ஒர் அற்புதத் துதி செய்தான்.
ஒர் அதிசயம் நிகழ்ந்தது!.அந்த வீட்டு முற்றத்தில் தங்கத்தினாலான நெல்லிக் கனிகள் மழையாகப் பொழிந்தன. அன்பில் பிச்சையிட்ட ஒரு நெல்லிக்கனிக்கு ஈடாக,அவர்களது வறுமை முழுவதும் மறையுமளவுக்கு பொன் நெல்லிக்கனிகளை பொழிந்து விட்டாள் செல்வ தேவதை. சங்கரனின் மணி வாக்கே இதற்குக் காரணம். பொன்மழை பொழிவித்த இத்துதி "கனகதாரஸ்தவம்"என்றே வழங்குகிறது.
அறிவில் இணையற்ற சங்கரன்,மூன்றே ஆண்டுகளில் சகல நூல்களையும் கற்றுத் தேர்ந்து விட்டான். வேதங்கள்,சாஸ்திரங்கள்,காவியங்கள் யாவற்றிலும் பெரிய நிபுணனாகி விட்டான் எட்டே வயதுப் பாலன் சங்கரன்.
குருகுல வாசம் முடிந்து,வீடு திரும்பினான் சங்கரன். கணவனை இழந்திருந்த அன்னைககு எந்தக் குறையும் தெரியாதவாறு. மிகுந்த அன்போடு பணிவிடை செய்து வந்தான்.................
ஒரு முறை ஆர்யாம்பாளுக்கு நோய் உண்டாயிற்று. அதிகமாக நடக்க முடியாமல் அவளுக்கு சக்திக் குறைவு ஏற்பட்டது. காலடியில் இருக்கும் போதெல்லாம் அவள் ஒரு நாள் கூடத் தவறாமல் அவ்வூரில் ஓடும் புண்ணிய நதியான 'பூர்ணா' வில் தான் ஸ்னானம் செய்வாள். இந்த ஆற்றை 'சூர்ணா'என்னும் 'ஆல்வாய் புழை'என்றும் செல்வார்கள். இப்போது ஆர்யாம்பாளால் நடமாட முடியாததால் நதி ஸ்னானம் செய்ய முடியவில்லை. இது அவளுக்கு மிகவும் குறையாக இருந்தது.
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக