வெள்ளி, 9 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-21

                                                       
ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் கோவில் கொண்ட இடத்திற்குச் சற்று தூரத்தில் உள்ள ஹாடகேசுவரம் என்னும் மனித சஞ்சாரமற்ற பகுதியில் ஆசாரியர் பல நாட்கள் தன்னந்தனியாகத் தவம் இருந்து வந்தார்.
இச்சமயத்தில் தன்னுடைய கொடூர எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டான் கிரகசன் என்ற பயங்கரமான கபாலிகன். கபாலம் எனப்படும் மண்டைஒட்டை ஏந்தும் சிவனே கபாலி. உக்கிரமான முறையில் சுடுகாட்டில் வசித்து, கபால மாலைகளைப் பூண்டு, நரபலியும் மிருகபலியும் தந்து கபாலியை வழிபடுவோறே கபாலிகர் எனப்பவர்.
அக்காலத்தில் கபாலிகர்களின் தலைவன் கிரகசன். இவர்களுக்கு சங்கரரே பெரிய விரோதி. இறைவனை அன்பு வழியிலேயே பூஜிக்க வேண்டும், உக்கிரகம் கூடாதுஎன்று சங்கரர் போதித்து வந்ததால், அவரை இவர்கள் எதிரியாகக் கருதினர்.
நமது ஆச்சாரியார் "தமது எலும்பும் பிறர்குரிய"தியாக சிகாமணி என்று கிரகசன் அறிந்தான். எனவே அவனுக்கு ஒர் துர்எண்ணம் எழுந்தது. "சங்கரரிடமே சென்று உங்களைக் கபாலிக்குப் பலி கொடுக்க சம்மதம் தாருங்கள்"என்று கேட்டுவிடுவோமே!தியாகமே உறுவான அவர் இணங்கிவிடுவார். உடனே அவர் தலையை வெட்டுப்பறித்து விடலாம். இதனால் விரோதி தோலைவது மட்டுமில்லை. உத்தமத் துறவியைப் பலி பெற்றதால் மகிழ்ந்து கபாலியே நேரில் வந்து விரும்பிய வரம் அளிப்பார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று குதூகளித்தது பாவியின் உள்ளம்.
வெட்கமில்லாமல் ஆசாரியரிடம் சென்று தன் வேண்டுதலை வெளியிட்டான் கபாலிகத்தலைவன். தியாகியான சங்கரரும் மகிழ்ச்சி நிறைந்து சம்மதம் தந்தார் என் தலைதானே வேண்டும்?வெட்டி எடுத்துக்கொள்!இந்த உடலால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினேன். இதைக்கொண்டு ஏதோ பயன் பெறுவதாக c செல்வதில் மிகவும் நன்றி என்று அன்பொழுகக்கூறினார் ஆசாரியர், தம் உயிரைப் பறிக்க வந்த பாதகனிடம்,
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக