புதன், 14 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -26



                                                                  
காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டனர் ஆசாரியர். அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடிபீடம்'என்ற மகத்தான சக்திபீடம் உண்டு. காஞ்சிபுரத்தில் தமக்கெனமையமான மடத்தை ஏற்படுத்திக்கொண்ட சங்கரர், அந்த இடத்திற்கு காமாட்சி அம்மனின் பீடத்தின் பெயரான காமகோடிபீடம் என்பதையே தமது மடத்திற்கும் வைத்துக்கொண்டார்.
பஞ்சலிங்கங்களில் எஞ்சிய யோகலிங்கத்தை தனது பீடத்தின் பூஜைக்கென வைத்துக்கொண்டார். இன்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸ்வாமிகளும் பூஜை செய்யும் சந்திர மௌலீசுவ ஸ்படிகலிங்கமே இந்த யோகலிங்கமாகும்.
காஞ்சி மடத்தில் ஜகத்குரு ஸ்ரீ சங்கரபகவத்பாதர்கள் ஞான ஆட்சி நடத்தி, காமாட்சியை வழிபட்டு வாழ்ந்து வந்தார்.
வேத மதத்தில் பல தெய்வங்களை வழிபடுகின்றோம். ஆனால் இவை முற்றிலும் வேறு வேறானவை அல்ல. ஒரே பரமாத்மாதான் இப்படிப் பல தெய்வங்களாகி இருக்கிறார்
                           எனவே தெய்வங்களுக்குள் ஒன்று உயர்ந்தது. இன்னென்று தாழ்ந்தது என்று ஏற்றத்தாழ்வு பேசுவது அறிவின்மையாகும்.
ஸ்ரீசங்கரர் இவ்விதம் தம்தம் தெய்வத்தையே உயர்த்திப் பேசுபவர்களை எல்லாம் வாதத்தில் வென்று, எல்லா தெய்வங்களுக்கும் ஒன்றே என்பதை நாட்டினார்.
இருந்தாலும் ஒவ்வொறுவரும் தங்கள் மனப்பான்மைக்கு ஏற்றப்படி ஒரு தெய்வத்திடம் விஷேசமாக பக்தி செலுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார். இது இஷ்ட தெய்வ வழிபாடு எனப்படும். இவ்வாறு இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் மற்ற தெய்வங்களைத் தாழ்வாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே "பஞ்சாபதான பூஜை"என்பதற்க்குப் புத்துயிர் தந்தார் நம் ஆசாரியர். இதன்படி ஒவ்வொறுவரும் சிவன், அம்பிகை, திருமாள், வினாயகர், சூரியன் ஆகிய ஐவரையும் ஒரே பரம்பொருளின் வடிவங்களாகக் கொண்டு பூஜிக்க வேண்டும்.
இதில் ஐந்தில் ஒன்றை இஷ்டதெய்வமாக மத்தியில் வைத்து, மற்ற நான்கை அதைச்சுற்றி வைத்துப்பூஜிக்க வேண்டும். மேற்படி ஐந்து தெய்வங்களோடு முருகனையும் சேர்த்தால் ஆறாகிறது. இத்தெய்வம் ஒவ்வொன்றையும் முக்கியமாகக் கருதி ஆறு வழிபாட்டு முறைகள் உண்டு. இவை ஹண்மதம் எனப்படும். அனைவரும் பிறதெய்வ நிந்தனை இல்லாமலே தம் இஷ்டதெய்வத்தை வழிபட உதவிபுரிய வேண்டும் எனக்கருணை கொண்டார் சங்கரர். எனவே தாம் காஞ்சியில் இருந்தபோது ஆறு சீடர்களை நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்து, ஷண்மதங்களில் ஒவ்வொன்றையும் வேதவழிப்படி நிலைலிருத்தி வரச்செய்தார். அவர்களும் தமது பணியை வெற்றிகரமாகச் சாதித்துவிட்டு ஆசாரியரிடம் திரும்பினார்கள்.
இதனால் ஸ்ரீசங்கரர் "ஷண்மதாசாரியர்"என்ற புகழைப்பெற்றார்.
இருதியாக ஒருமுறை பண்டிதர் அனைவரையும் வென்று அத்வைதத்தை நிலை நாட்டிவிட்டு, உடலை நீத்துவிட வேண்டும் என முடிவுசெய்தார். சங்கரர் இதன் பொருட்டு காஞ்சியிலேயே ஸர்வக்ஞபீடம் அமைத்தார்
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக