சனி, 17 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-28

                                                                                                                    

காரியம் முடிந்துவிட்டது!காரியமற்ற பிரம்மத்தில் இரண்டறங்கலந்து அத்வைதம் ஆகிவிட ஆர்வம் கொண்டார். பிரம்மத்தின் சக்தியான காமாட்சியிடம் சென்றார். திரிபுரசுந்தரி வேதபாதஸ்தவம் என்ற பாடலால் அவளைத் துதித்தார். துதி முடியும்போது, துதிக்கத்தக்க அவரது பெருவாழ்வும் முடிந்தது. பராசக்தியோடு இரண்டறக் கலந்து விட்டார் நம் பரமாசாரியார் சங்கரர்.
இன்றும் காமாட்சி ஆலயத்தில் விக்கிரக வடிவில் வாழ்கிறார் நமது ஆச்சாரிய சங்கரர். அவருடைய சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்புறத்தில் விளங்கிக் கொண்டுள்ளது. அதோடு அவர் பூஜித்த அதே திருபுரசுந்தரி-சந்திரமௌலீசுவரரை இன்னும் பூஜிக்கும் காஞ்சிப் பெரியவர்களாகவும், புதுப்பெரியவர்களாகவும் பாலப் பெரியவர்களாகவும் தம் அருளை வெளியிடுகிறார்.                                                                                                                    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக