திங்கள், 12 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -24


                                                             
          
மகாவிஷ்ணு பூஜைக்குறிய சாளக்ராமம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியிலேயே கிடைப்பது. சிவபெருமான் உகந்து அணியும் ருத்ராக்ஷமும் அங்குதான் நிறைய காய்க்கிறது. பசுபதி நாதர் கோயில் முழுவதையும் சிவராத்திரியன்று ருத்திராட்சங்களால் அலங்கரித்து, விசேஷ பூஜை புரிவார்கள்.
இத்தனை சிறப்புகள் பொருத்திய பசுபதிநாதத்திற்கு ஸ்ரீசங்கரர் விஜயம் செய்து, ஸ்வாமி தரிசனம் செய்து பேரின்பம் எய்தினார். அங்கு ஆலய வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தித் தந்தார். சிவபெருமானிடமிருந்து பெற்ற ஜந்து ஸ்படிகலிங்கங்களுள் ஒன்றான முக்திலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீசங்கரர்.
அம்பிகைக்கு விசேஷமான ஐம்பத்தியரு சக்தி பீடங்களில் குஹ்யேச்வரி என்பது பசுபதிநாதத்தில் இருக்கிறது. அங்கும் சங்கரர் தரிசனம் செய்து மகிழ்ந்தார். ஸ்ரீசங்கரர்.
அம்பிகைக்கு விசேஷமான ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் குஹ்யேச்வரி என்பது பசுபதிநாதத்தில் இருக்கிறது. அங்கும் சங்கரர் தரிசனம் செய்து மகிழ்ந்தார். ஸ்ரீசங்கரர். கேதாரிநாதம் என்ற மகா க்ஷேத்திரத்தை அடைந்தார். இமாலயத்தில் உள்ள இந்த சிவஸ்தலம், திருமாளுக்குரிய பதரிநாதத்தோடு எப்போதும் சேர்ந்தே பேசப்படும் பெருமை வாய்ந்தது.
பரமசிவனிடமிருந்து பெற்ற ஐந்து பங்கு லிங்கங்களுள் மற்றொன்றான முக்திலிங்கத்தை கேதாரிநாதத்தில் ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
பாரததேசத்தின் நான்கு திசைகளிலுமாக மொத்தம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. இவற்றில் ஒன்று கேதார்நாத்தில் உள்ளது. ஸ்ரீசங்கரர் இயற்றிய "துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திர"த்தில் கேதாரிநாதனைக் குறிப்பிட்டு வந்தனம் தெரிவிக்கிறார்.
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக