ஞாயிறு, 11 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-23


                                                            
    
கயிலையில் உமையன்னையுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு களிகொண்டு வணங்கினார் ஸ்ரீசங்கரர். சிவ பெருமானின் அடியிலிருந்து முடிவரை வர்னித்துப்பாடினார். அதில் திருப்தி உண்டாகாமல் மீண்டும் முடியிலிருந்து அடி வரையில் வர்ணணை செய்து இன்னொரு துதி செய்தார். இவை "சிவ பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்"எனவும் சிவ கேசாதி பாதாந்த ஸ்தோத்திரம் எனவும் வழங்குகின்றன.
சிவபெருமான் தனது அவதாரமான சங்கரர் செய்துவரும் அரும் பணியைப் பாராட்டினார். "பஞ்ச லிங்கங்கள்"ஐந்து ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்குத் தந்தார். அவருக்கு அருகே இருந்த சக்தியை துதிப்பதற்கு முடியாமல் சங்கரர் பிரம்மித்து நின்றார். உடனே பரமசிவன் தாமே அம்பிகையை துதித்துச் செய்திருந்த "ஸெளந்தர்யலஹரி"என்ற நூல் சுவடியையும் சங்கரருக்கு வழங்கினார்.
இவற்றைப் பெற்று மிகுந்த பூரிப்போடு சங்கரர் கையிலையிலிருந்து வெளிவந்தார். காவலில் இருந்த நந்திதேவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பாதிசுலோகங்களை அவருக்குக் கொடுத்துவிட்டார். "ஸெளந்தர்யலகரி"யின் முதல் நாற்பத்தியரு சுலோகங்கள் மட்டும்சங்கரர் கையில் தங்கின. மீதமுள்ள ஐம்பத்தொன்பது சுலொகச்சுவடிகளை நந்திதேவர் பெற்றுக்கொண்டார்.
கையிலையைவிட்டு வெளிவந்த நம் ஆசாரியருக்கு இப்போது அம்பிகையைக் குறித்த பிரம்மிப்பு நீங்கிவிட்டது. அவளது அருளால் அவரே புதிதாக ஐம்பத்தொன்பது அற்புதமான சுலோகங்களை இயற்றி, நூலைப் பூர்த்திசெய்து விட்டார். ஆசாரியரின் பல துதிகளுக்குள் இலக்கியச் சுவையில் சிகரமாக விளங்குவது "ஸெளந்தர்யலகரி"யே ஆகும். அதைப் பாராயணம் செய்வதால் பலவிதமான உபகர நலன்களும் கைகூடும். பசுபதிநாதர் என்ற ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தின் சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பாக உள்ளது லிங்கத்தின் நான்கு புறங்களில் திசைக்கொன்றாக ஒவ்வொறு முகம் லிங்கத்தின் உச்சியில் அம்பிகையின் வடிவான ஸ்ரீசக்ரம் எழுதிப் பூஜிப்பது இன்னொரு முகத்துக்குச் சமானம்.
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக