சனி, 10 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-22


                                                                
    
சங்கரரின் தலையை வெட்டுவதற்காக கபாலிகன் வாளை ஓங்கிவிட்டான். அதே சமயத்தில் எங்கோ இருந்த பத்பநாதரின் மீது உக்கிரநரசிம்மரின் ஆவேசம் உண்டாயிற்று. அவர் தம்மையும் மீறிய அச்சக்தியின் தூன்டுதலில் ஹாடகேசுவரத்திற்கு ஒரே நெடியில் வந்துவிட்டார். சங்கரரின் தலையை வெட்ட இருந்த கிரகசனை நரசிம்மர் போலவே நகத்தால் கிழித்துப்போட்டுவிட்டார். கொள்ள வந்தவன் கொலையுண்டான்!பத்மபாதரிடம் இருந்து நரசிம்மரின் ஆவேசமும் அகன்றது!
ஸ்ரீசங்கரர் நரசிம்மரை துதித்துவிட்டு, நரசிம்ம க்ஷேத்திரமான அஹோபிலத்துக்குத் சென்று வழிபட்டார். தலம் தலமாகச்சென்று பரதகண்டத்தின் வடக்கேயுள்ள இமாலயப் பகுதிகளிலே சஞ்சாரம் செய்து பதரீவனம் பதரிகாசிரமம் என்றெல்லாம்என்றெல்லாம் அழைக்கப்படும் பத்ரிநாத்தை
அடைந்தார். அங்கு ஒருநாள் மகாவிஷ்ணு அவருக்கு தரிசனம்தந்து, இங்கே அலகநந்தா நதிப்படுக்கையில் என் பூரண சாந்நித்தியம் கொண்ட விக்கிரகம் ஒன்று புதைந்துள்ளது. அதை எடுத்து பிரதிஷ்டை செய்வாயாக என்று உத்திரவிட்டார்.
அவ்விதமே சங்கரர் அலகநந்தா படுகையில் தோண்றியவுடன் திவ்வியமான விக்ரஹம் கிடைத்தது. அதை சங்கரர், ஆலையத்தில் பிரதிஷ்டை செய்தார். பத்ரி நாராயணன் என்று இன்றளவும் உலகமெல்லாம் கோண்டாடும் மூர்த்தி இதுவேயாகும்.
இவ்விதமாக புனிதயாத்திரையை மேற்கொண்டு கேதார்நாத்திற்கு வந்து சேர்ந்தார் சங்கரர். அங்கு தமது பூதவுடலைக் கிடத்திவிட்டு, யோகசக்தியின் மூலம் சூட்சம சரீரத்தோடு கைலாயம் சென்றார். ஸ்ரீசங்கரர் தமது பூதவுடலைவிட்டு பஞ்சலிங்கங்களைப் பெற வேண்டியே கைலாயம் சென்றார் என்பதை ஆதாரப்பூர்வமாக அறியாத சிலர் ஆசாரியர் தமது பூத உடலையே கேதாரிநாத்தில் நீத்து முக்தி அடைந்தார் என்று தவராகக்கருதி கொண்டுள்ளனர்.
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக